|
அத்தியாயம்-2 சூரத்துல்
பகரா (பசுமாடு) அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகிறேன்) 2:1. அலிஃப் லாம் மீ;ம். 2:2. இது (அல்லாஹ்வின்)
திரு வேதமாகும்; இதில்
எத்தகைய சந்தேகமும்
இல்லை பயபக்தியுடையோருக்கு
(இது) நேர்வழிகாட்டியாகும். 2:3. (பயபக்தியுடைய)
அவர்கள் (புலன்களுக்கு
எட்டா) மறைவானவற்றின்
மீது நம்பிக்கை
கொள்வார்கள்; தொழுகையையும்
(உறுதியாக முறைப்படிக்)
கடைப்பிடித்து
ஒழுகுவார்கள்; இன்னும்
நாம் அவர்களுக்கு
அளித்தவற்றிலிருந்து
(நல்வழியில்) செலவும்
செய்வார்கள். 2:4. (நபியே!)
இன்னும் அவர்கள்
உமக்கு அருளப்பெற்ற
(வேதத்)தின் மீதும்; உமக்கு
முன்னர் அருளப்பட்டவை
மீதும் நம்பிக்கை
கொள்வார்கள்; இன்னும்
ஆகிரத்தை(மறுமையை)
உறுதியாக நம்புவார்கள். 2:5. இவர்கள்
தாம் தங்கள் இறைவனின்
நேர்வழியில்
இருப்பவர்கள்; மேலும்
இவர்களே வெற்றியாளர்கள். 2:6. நிச்சயமாக
காஃபிர்களை (இறைவனை
நிராகரிப்போரை)
நீர் அச்சமூட்டி
எச்சரித்தாலும்
(சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும்
சரியே! அவர்கள்
ஈமான் (இறை நம்பிக்கை)
கொள்ள மாட்டார்கள். 2:7. அல்லாஹ்
அவர்களின் இதயங்களிலும்; அவர்கள்
செவிப்புலன்களிலும்
முத்திரை வைத்துவிட்டான்;;; இன்னும்
அவர்களின் பார்வை
மீது ஒரு திரை
கிடக்கிறது; மேலும்
அவர்களுக்கு
கடுமையான வேதனையுமுண்டு. 2:8. இன்னும்
மனிதர்களில்
''நாங்கள் அல்லாஹ்வின்
மீதும்; இறுதி(த்
தீர்ப்பு) நாள்
மீதும் ஈமான்
(நம்பிக்கை) கொள்கிறோம்""
என்று கூறுவோறும்
இருக்கின்றனர்; ஆனால்
(உண்மையில்) அவர்கள்
நம்பிக்கை கொண்டோர்
அல்லர். 2:9. (இவ்வாறு
கூறி) அவர்கள்
அல்லாஹ்வையும்; ஈமான்
(இறை நம்பிக்கை)
கொண்டோரையும்
ஏமாற்ற நினைக்கின்றார்கள்;; ஆனால்
அவர்கள் (உண்மையில்)
தம்மைத்தாமே
ஏமாற்றிக்கொள்கிறார்களே
தவிர வேறில்லை; எனினும்
அவர்கள் (இதை) உணர்ந்து
கொள்ளவில்லை. 2:10. அவர்களுடைய
இதயங்களில் ஒரு
நோயுள்ளது; அல்லாஹ்
(அந்த) நோயை அவர்களுக்கு
இன்னும் அதிகமாக்கி
விட்டான்; மேலும்
அவர்கள் பொய்சொல்லும்
காரணத்தினால்
அவர்களுக்குத்
துன்பந்தரும்
வேதனையும் உண்டு. 2:11. ''பூமியில்
குழப்பத்தை உண்டாக்காதீர்கள்""
என்று அவர்களிடம்
சொல்லப்பட்டால்
''நிச்சயமாக
நாங்கள் தாம்
சமாதானவாதிகள்""
என்று அவர்கள்
சொல்கிறார்கள். 2:12. நிச்சயமாக
அவர்கள் தாம்
குழப்பம் உண்டாக்குபவர்கள்
அன்றோ ஆனால்
அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. 2:13. (மற்ற)
மனிதர்கள் ஈமான்
கொண்டது போன்று
நீங்களும் ஈமான்
கொள்ளுங்கள்
என்று அவர்களிடம்
சொல்லப்பட்டால் 'மூடர்கள்
ஈமான் (நம்பிக்கை)
கொண்டது போல் நாங்களும்
ஈமான் (நம்பிக்கை)
கொள்ளவேண்டுமா?" என்று
அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல)
நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே
மூடர்கள். ஆயினும்
(தம் மடமையை) இவர்கள்
அறிவதில்லை. 2:14. இன்னும்
(இந்தப் போலி விசுவாசிகள்)
ஈமான் கொண்டிருப்போரைச்
சந்திக்கும்
போது ''நாங்கள்
ஈமான் கொண்டிருக்கிறோம்""
என்று கூறுகிறார்கள்; ஆனால்
அவர்கள் தங்கள்
(தலைவர்களாகிய)
ஷைத்தான்களுடன்
தனித்திருக்கும்போது ''நிச்சயமாக
நாங்கள் உங்களுடன்தான்
இருக்கிறோம்; நிச்சயமாக
நாங்கள் (அவர்களைப்)
பரிகாசம் செய்பவர்களாகவே
இருக்கிறோம்""
எனக் கூறுகிறார்கள். 2:15. அல்லாஹ்
இவர்களைப் பரிகசிக்கிறான்.
இன்னும் இவர்களின்
வழிகேட்டிலேயே
கபோதிகளாகத்
தட்டழியும்படி
விட்டு விடுகிறான். 2:16. இவர்கள்
தாம் நேர்வழிக்கு
பதிலாகத் தவறான
வழியைக் கொள்முதல்
செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய
(இந்த) வியாபாரம்
இலாபம் தராது மேலும் இவர்கள்
நேர்வழி பெறுபவர்ளும்
அல்லர். 2:17. இத்தகையோருக்கு
ஓர் உதாரணம்; நெருப்பை
மூட்டிய ஒருவனின்
உதாரணத்தைப்
போன்றது. அ(ந் நெருப்பான)து
அவனைச் சுற்றிலும்
ஒளி வீசியபோது; அல்லாஹ்
அவர்களுடைய ஒளியைப்
பறித்துவிட்டான்; இன்னும்
பார்க்க முடியாத
காரிருளில் அவர்களை
விட்டு விட்டான். 2:18. (அவர்கள்)
செவிடர்களாக ஊமையர்களாக குருடர்களாக
இருக்கின்றனர்.
எனவே அவர்கள்
(நேரான வழியின்
பக்கம்) மீள மாட்டார்கள். 2:19. அல்லது (இன்னும் ஓர்
உதாரணம்;) காரிருளும் இடியும் மின்னலும்
கொண்டு வானத்திலிருந்து
கடுமழை கொட்டும்
மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்)
மரணத்திற்கு
அஞ்சி இடியோசையினால் தங்கள் விரல்களைத்
தம் காதுகளில்
வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால்
அல்லாஹ் (எப்போதும்
இந்த) காஃபிர்களைச்
சூழ்ந்தனாகவே
இருக்கின்றான். 2:20. அம்மின்னல்
அவர்களின் பார்வைகளைப்
பறித்துவிடப்
பார்க்கிறது.
அ(ம் மின்னலான)து
அவர்களுக்கு
ஒளி தரும் போதெல்லாம் அவர்கள் அதி(ன்
துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை
இருள் சூழ்ந்து
கொள்ளும் போது
(வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும்
அல்லாஹ் நாடினால்
அவர்களுடைய கேள்விப்
புலனையும் பார்வைகளையும்
போக்கிவிடுவான்; நிச்சயமாக
அல்லாஹ் எல்லாவற்றின்
மீதும் பேராற்றல்
உடையவன். 2:21. மனிதர்களே!
நீங்கள் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள்
இறைவனையே வணங்குங்கள்.
(அதனால்) நீங்கள்
தக்வா (இறையச்சமும் து}ய்மையும்)
உடையோராகளாம். 2:22. அ(ந்த
இறை)வனே உங்களுக்காக
பூமியை விரிப்பாகவும் வானத்தை விதானமாகவும்
அமைத்து வானத்தினின்றும்
மழை பொழியச்செய்து அதனின்று
உங்கள் உணவிற்காகக்
கனி வர்க்கங்களை
வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்)
நீங்கள் அறிந்து
கொண்டே இருக்கும்
நிலையில் அல்லாஹ்வுக்கு
இணைகளை ஏற்படுத்தாதீர்கள். 2:23. இன்னும் (முஹம்மது
(ஸல்) என்ற) நம் அடியாருக்கு
நாம் அருளியுள்ள
(வேதத்)தில் நீங்கள்
சந்தேகம் உடையோராக
இருப்பீர்களானால் (அந்த சந்தேகத்தில்)
உண்மை உடையோராகவும்
இருப்பீர்களானால்
அல்லாஹ்வைத்தவிர
உங்கள் உதவியாளர்களை(யெல்லாம்
ஒன்றாக) அழைத்து
(வைத்து)க்கொண்டு
இது போன்ற ஓர்
அத்தியாயமேனும்
கொன்டு வாருங்கள். 2:24. (அப்படி)
நீங்கள் செய்யாவிட்டால் அப்படிச்
செய்ய உங்களால்
திண்ணமாக முடியாது மனிதர்களையும்
கற்களையும் எரிபொருளாகக்
கொண்ட நரக நெருப்பை
அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அந்த நெருப்பு இறைவனையும்
அவன் வேதத்தையும்
ஏற்க மறுக்கும்)
காஃபிர்களுக்காகவே
அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. 2:25. (ஆனால்)
நம்பிக்கை கொண்டு
நற்கருமங்கள்
செய்வோருக்கு
நன்மாராயங்கள்
கூறுவீராக! சதா
ஓடிக்கொண்டிருக்கும்
ஆறுகளைக் கொண்ட
சுவனச் சோலைகள்
அவர்களுக்காக
உண்டு அவர்களுக்கு
உண்ண அங்கிருந்து
ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம்
''இதுவே முன்னரும்
நமக்கு (உலகில்)
கொடுக்கப்பட்டிருக்கிறது""
என்று கூறுவார்கள்; ஆனால்
(தோற்றத்தில்)
இது போன்றதுதான்
(அவர்களுக்கு
உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன இன்னும் அவர்களுக்கு
அங்கு து}ய துணைவியரும்
உண்டு மேலும்
அவர்கள் அங்கே
நிரந்தரமாக வாழ்வார்கள். 2:26. நிச்சயமாக
அல்லாஹ் கொசுவையோ அதிலும் (அற்பத்தில்)
மேற்பட்டதையோ
உதாரணம் கூறுவதில்
வெட்கப்படமாட்டான்.
(இறை) நம்பிக்கைக்
கொண்டவர்கள்
நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து
தங்கள் இறைவனிடமிருந்து
வந்துள்ள உண்மையென்பதை
அறிவார்கள்; ஆனால்
(இறை நம்பிக்கையற்ற)
காஃபிர்களோ ''இவ்வித
உதாரணத்தின்
மூலம் இறைவன்
என்ன நாடுகிறான்?"" என்று
(ஏளனமாகக்) கூறுகிறார்கள்.
அவன் இதைக்கொண்டு
பலரை வழிகேட்டில்
விடுகிறான்; இன்னும்
பலரை இதன் மூலம்
நல்வழிப் படுத்துகிறான்; ஆனால்
தீயவர்களைத்
தவிர (வேறு யாரையும்)
அவன் அதனால் வழிகேட்டில்
ஆக்குவதில்லை. 2:27. இ(த்
தீய)வர்கள் அல்லாஹ்விடம்
செய்த ஒப்பந்தத்தை அது உறுதிப்படுத்தப்பட்ட
பின்னர் முறித்து
விடுகின்றனர்.
அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட
வேண்டும் என்று
கட்டளை இட்டதைத்
துண்டித்து விடுவதுடன்
பூமியில் குழப்பத்தையும்
உண்டாக்குகிறார்கள்; இவர்களே
தாம் நஷ்டவாளிகள். 2:28. நீங்கள்
எப்படி அல்லாஹ்வை
நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக
இருந்த உங்களுக்கு
அவனே உயிரூட்டினான்; பின்பு
அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும்
உங்களை உயிர்
பெறச் செய்வான்; இன்னும்
நீங்கள் அவன்
பக்கமே திருப்பிக்கொண்டுவரப்
படுவீர்கள். 2:29. அ(வ்விறை)வன்
எத்தகையவன் என்றால்
அவனே உலகத்திலுள்ள
அனைத்தையும்
உங்களுக்காகப்
படைத்தான்; பின் அவன்
வானத்தின் பக்கம்
முற்பட்டான்; அவற்றை
ஏழு வானங்களாக
ஒழுங்காக்கினான்.
அன்றியும் அவனே
ஒவ்வொரு பொருளையும்
நன்கறிபவனாக
இருக்கின்றான்.
2:30. (நபியே)
இன்னும் உம் இறைவன்
வானவர்களை நோக்கி
''நிச்சயமாக
நான் பூமியில்
ஒரு பிரதிநிதியை
அமைக்கப் போகிறேன்""
என்று கூறியபோது அவர்கள் ''(இறைவா!)
நீ அதில் குழப்பத்தை
உண்டாக்கி இரத்தம் சிந்துவோரையா
அமைக்கப்போகிறாய்? இன்னும்
நாங்களோ உன் புகழ்
ஓதியவர்களாக
உன்னைத் துதித்து உன் பரிசுத்ததைப்
போற்றியவர்களாக
இருக்கின்றோம்; என்று
கூறினார்கள்; அ(தற்கு
இறை)வன் ''நீங்கள்
அறியாதவற்றையெல்லாம்
நிச்சயமாக நான்
அறிவேன்"" எனக்
கூறினான். 2:31. இன்னும் (இறைவன்) எல்லாப்
(பொருட்களின்)
பெயர்களையும்
ஆதமுக்கு கற்றுக்
கொடுத்தான்; பின் அவற்றை
வானவர்கள் முன்
எடுத்துக்காட்டி ''நீங்கள்
(உங்கள் கூற்றில்)
உண்மையாளர்களாயிருப்பின்
இவற்றின் பெயர்களை
எனக்கு விவரியுங்கள்""
என்றான். 2:32. அவர்கள்
''(இறைவா!) நீயே
து}யவன். நீ எங்களுக்குக்
கற்றுக்கொடுத்தவை
தவிர எதைப்பற்றியும்
எங்களுக்கு அறிவு
இல்லை. நிச்சயமாக
நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்""
எனக் கூறினார்கள்.
2:33. ''ஆதமே! அப்
பொருட்களின்
பெயர்களை அவர்களுக்கு
விவரிப்பீராக!""
என்று (இறைவன்)
சொன்னான்; அவர் அப்பெயர்களை
அவர்களுக்கு
விவரித்தபோது
''நிச்சயமாக
நான் வானங்களிலும் பூமியிலும்
மறைந்திருப்பவற்றை
அறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்துக்
கொண்டிருப்பதையும்
நான் அறிவேன்
என்றும் உங்களிடம்
நான் சொல்லவில்லையா?"" என்று
(இறைவன்) கூறினான்.
2:34. பின்னர்
நாம் மலக்குகளை
நோக்கி ''ஆதமுக்குப்
பணி(ந்து ஸ{ஜூது செய்)யுங்கள்""
என்று சொன்னபோது
இப்லீஸைத்தவிர
மற்ற அனைவரும்
சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸ{) மறுத்தான்; ஆணவமும்
கொண்டான்; இன்னும்
அவன் காஃபிர்களைச்
சார்ந்தவனாகி
விட்டான். 2:35. மேலும்
நாம் ''ஆதமே! நீரும்
உம் மனைவியும்
அச்சுவனபதியில்
குடியிருங்கள்.
மேலும் நீங்கள்
இருவரும் விரும்பியவாறு
அதிலிருந்து
தாராளமாக புசியுங்கள்; ஆனால்
நீங்கள் இருவரும்
இம்மரத்தை மட்டும்
நெருங்க வேண்டாம்; (அப்படிச்
செய்தீர்களானால்)
நீங்கள் இருவரும்
அக்கிரமக்காரர்களில்
நின்றும் ஆகிவிடுவீர்கள்""
என்று சொன்னோம்.
2:36. இதன்பின் ஷைத்தான்
அவர்கள் இருவரையும்
அதிலிருந்து
வழி தவறச் செய்தான்; அவர்கள்
இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து
வெளியேறுமாறு
செய்தான்; இன்னும்
நாம் ''நீங்கள்
(யாவரும் இங்கிருந்து)
இறங்குங்கள்; உங்களில்
சிலர் சிலருக்கு
பகைவராக இருப்பீர்கள்; பூமியில்
ஒரு குறிப்பிட்ட
காலம் வரை உங்களுக்குத்
தங்குமிடமும்
அனுபவிக்கும்
பொருள்களும்
உண்டு"" என்று
கூறினோம். 2:37. பின்னர்
ஆதம் தம் இறைவனிடமிருந்து
சில வாக்குகளைக்
கற்றுக் கொண்டார்; (இன்னும் அவற்றின்
முலமாக இறைவனிடம்
மன்னிப்புக்கோரினார்)
எனவே இறைவன் அவரை
மன்னித்தான்; நிச்சயமாக
அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும்
ஆவான். 2:38. (பின்பு நாம் சொன்னோம்; ''நீங்கள்
அனைவரும் இவ்விடத்தை
விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து
உங்களுக்கு நிச்சயமாக
நல்வழி(யைக் காட்டும்
அறிவுரைகள்) வரும்போது யார் என்னுடைய
(அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ
அவர்களுக்கு
எத்தகைய பயமும்
இல்லை அவர்கள்
துக்கப்படவும்
மாட்டார்கள்.""
2:39. அன்றி
யார் (இதை ஏற்க)
மறுத்து நம் அத்தாட்சிகளை
பொய்பிக்க முற்படுகிறார்களோ
அவர்கள் நரக வாசிகள்; அவர்கள்
அ(ந் நரகத்)தில்
என்றென்றும்
தங்கி இருப்பர்.
2:40. இஸ்ராயீலின்
சந்ததியனரே! நான்
உங்களுக்கு அளித்த
என்னுடைய அருட்கொடையை
நினைவு கூறுங்கள்; நீங்கள்
என் வாக்குறுதியை
நிறைவேற்றுங்கள்; நான் உங்கள்
வாக்குறுதியை
நிறைவேற்றுவேன்; மேலும் நீங்கள் (வேறெவருக்கும்
அஞ்சாது) எனக்கே
அஞ்சுவீர்களாக.
2:41. இன்னும்
நான் இறக்கிய(வேதத்)தை
நம்புங்கள்; இது உங்களிடம்
உள்ள (வேதத்)தை
மெய்ப்பிக்கின்றது நீங்கள் அதை
(ஏற்க) மறுப்பவர்களில்
முதன்மையானவர்களாக
வேண்டாம். மேலும்
என் திரு வசனங்களைச்
சொற்ப விலைக்கு
விற்று விடாதீர்கள்; இன்னும்
எனக்கே நீங்கள்
அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
2:42. நீங்கள்
அறிந்து கொண்டே
உண்மையைப் பொய்யுடன்
கலக்காதீர்கள்; உண்மையை
மறைக்கவும் செய்யாதீர்கள்.
2:43. தொழுகையைக்
கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும்
(ஒழுங்காகக்) கொடுத்து
வாருங்கள்; ருகூஃ
செய்வோரோடு சேர்ந்து
நீங்களும் ருகூஃ
செய்யுங்கள்.
2:44. நீங்கள்
வேதத்தையும்
ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை
நன்மை செய்யுமாறு
ஏவி தங்களையே
மறந்து விடுகிறீர்களா? நீங்கள்
சிந்தித்துப்
புரிந்து கொள்ள
வேண்டாமா? 2:45. மேலும்
பொறுமையைக் கொண்டும் தொழுகையைக்கொண்டும்
(அல்லாஹ்விடம்)
உதவி தேடுங்கள்; எனினும் நிச்சயமாக
இது உள்ளச்சம்
உடையோர்க்கன்றி
மற்றவர்களுக்குப்
பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:46. (உள்ளச்சமுடைய)
அவர்கள்தாம் ''திடமாக
(தாம்) தங்கள் இறைவனைச்
சந்திப்போம்; நிச்சயமாக
அவனிடமே தாம்
திரும்பச்செல்வோம்""
என்பதை உறுதியாகக்
கருத்தில் கொண்டோராவார்;. 2:47. இஸ்ராயீலின்
மக்களே! (முன்னர்)
நான் உங்களுக்கு
அளித்த என்னுடைய
அருட் கொடையையும் உலகோர் யாவரையும்
விட உங்களை மேன்மைப்படுத்தினேன்
என்பதையும் நினைவு
கூறுங்கள். 2:48. இன்னும் ஒர் ஆத்மா
மற்றோர் ஆத்மாவிற்கு
சிறிதும் பயன்பட
முடியாதே (அந்த)
ஒரு நாளை நீங்கள்
அஞ்சி நடப்பீர்களாக!
(அந்த நாளில்) எந்தப்
பரிந்துரையும்
அதற்காக ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது அதற்காக எந்தப்
பதிலீடும் பெற்றுக்
கொள்ளப்பட மாட்டாது அன்றியும்
(பாவம் செய்த) அவர்கள்
உதவி செய்யப்படவும்
மாட்டார்கள். 2:49. உங்களை
கடுமையாக வேதனைப்படுத்தி
வந்த ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரிடமிருந்து
உங்களை நாம் விடுவித்ததையும்
(நினைவு கூறுங்கள்)
அவர்கள் உங்கள்
ஆண் மக்களை கொன்று உங்கள் பெண்மக்களை
(மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில்
உங்களுக்கு உங்கள்
இறைவனிடமிருந்து
ஒரு சோதனை இருந்தது.
2:50. மேலும்
உங்களுக்காக
நாம் கடலைப்பிளந்து உங்களை நாம்
காப்பாற்றி நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கும்போதே
ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரை
அதில் மூழ்கடித்தோம்(என்பதையும்
நினைவு கூறுங்கள்).
2:51. மேலும்
நாம் மூஸாவுக்கு(வேதம்
அருள) நாற்பது
இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக
அவர் சென்ற) பின்னர்
காளைக்கன்(று
ஒன்)றைக் (கடவுளாக)
எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்)
நீங்கள் அக்கிரமக்காரர்களாகி
விட்டீர்கள்.
2:52. இதன்
பின்னரும் நீங்கள் நன்றி
செலுத்துவதற்காக
நாம் உங்களை மன்னித்தோம்.
2:53. இன்னும் நீங்கள் நேர்வழி
பெறும்பொருட்டு
நாம் மூஸாவுக்கு
வேதத்தையும்
(நன்மை தீமைகளைப்
பிரித்து அறிவிக்கக்கூடிய)
ஃபுர்க்கானையும்
அளித்தோம் (என்பதையும்
நினைவு கூறுங்கள்).
2:54. மூஸா
தம் சமூகத்தாரை
நோக்கி ''என் சமூகத்தாரே!
நீங்கள் காளைக்
கன்றை(வணக்கத்திற்காக)
எடுத்துக் கொண்டதன்
மூலம் உங்களுக்கு
நீங்களே அக்கிரமம்
செய்து கொண்டீர்கள்; ஆகவே உங்களைப்
படைத்தவனிடம்
பாவமன்னிப்புக்
கோருங்கள்; உங்களை
நீங்களே மாய்த்துக்
கொள்ளுங்கள்; அதுவே
உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு
நற்பலன் அளிப்பதாகும்""
எனக் கூறினார்.
(அவ்வாறே நீங்கள்
செய்ததனால்) அவன்
உங்களை மன்னித்தான்
(என்பதையும் நினைவு
கூறுங்கள்.) நிச்சயமாக அவன் தவ்பாவை
ஏற்(று மன்னிப்)பவனாகவும் பெருங் கருணையுடையோனாகவும்
இருக்கிறான்.
2:55. இன்னும்
(இதையும் நினைவு
கூறுங்கள்;)நீங்கள் 'மூஸாவே!
நாங்கள் அல்லாஹ்வை
கண்கூடாக காணும்
வரை உம்மீது நம்பிக்கை
கொள்ள மாட்டோம்""
என்று கூறினீர்கள்; அப்பொழுது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
உங்களை ஓர் இடி
முழக்கம் பற்றிக்கொண்டது. 2:56. நீங்கள்
நன்றியுடையோராய்
இருக்கும் பொருட்டு நீங்கள் இறந்தபின்
உங்களை உயிர்ப்பித்து
எழுப்பினோம்.
2:57. இன்னும் உங்கள் மீது
மேகம் நிழலிடச்
செய்தோம்; மேலும்
''மன்னு ஸல்வா"" (என்னும்
மேன்மையான உணவுப்
பொருள்களை) உங்களுக்காக
இறக்கி வைத்து ''நாம் உங்களுக்கு
அருளியுள்ள பரிசுத்தமான
உணவுகளிலிருந்து
புசியுங்கள்""
(என்றோம்;) எனினும்
அவர்கள் நமக்குத்
தீங்கு செய்துவிடவில்லை மாறாக தமக்குத்
தாமே தீங்கிழைத்துக்
கொண்டார்கள்.
2:58. இன்னும்
(நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; '' இந்த பட்டினத்துள்
நுழைந்து அங்கு
நீங்கள் விரும்பிய
இடத்தில் தாராளமாகப்
புசியுங்கள்; அதன் வாயிலில்
நுழையும் போது பணிவுடன்
தலைவணங்கி 'ஹித்ததுன்"
(-''எங்கள் பாபச்
சுமைகள் நீங்கட்டும்"")
என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக
உங்கள் குற்றங்களை
மன்னிப்போம்; மேலும்
நன்மை செய்வோருக்கு
அதிகமாகக் கொடுப்போம். 2:59. ஆனால்
அக்கிரமக்காரர்கள்
தம்மிடம் கூறப்பட்ட
வார்த்தையை அவர்களுக்குச்
சொல்லப்படாத
வேறு வார்த்தையாக
மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள்
செய்தவர்கள்
மீது - (இவ்வாறு
அவர்கள்) பாபம்
செய்து கொண்டிருந்த
காரணத்தினால்
வானத்திலிருந்து
நாம் வேதனையை
இறக்கிவைத்தோம்.
2:60. மூஸா
தம் சமூகத்தாருக்காகத்
தண்ணீர் வேண்டிப்
பிரார்த்தித்த
போது ''உமது கைத்தடியால்
அப்பாறையில்
அடிப்பீராக!""
என நாம் கூறினோம்; அதிலிருந்து
பன்னிரண்டு நீர்
ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன.
ஒவ்வொரு கூட்டத்தினரும்
அவரவர் குடி நீர்த்துறையை
நன்கு அறிந்து
கொண்டனர்; ''அல்லாஹ்
அருளிய ஆகாரத்திலிருந்து
உண்ணுங்கள் பருகுங்கள்; பூமியில்
குழப்பஞ்செய்து
கொண்டு திரியாதீர்கள்""
(என நாம் கூறினோம்)
என்பதையும் நினைவு
கூறுங்கள். 2:61. இன்னும் ''மூஸாவே!
ஒரே விதமான உணவை
நாங்கள் சகிக்க
மாட்டோம். ஆதலால் பூமி விளைவிக்கும்
அதன் கீரையையும் அதன் வெள்ளரிக்காயையும் அதன் கோதுமையையும் அதன் பருப்பையும் அதன் வெங்காயத்தையும்
எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு
உன் இறைவனிடம்
எங்களுக்காகக்
கேளும்"" என்று
நீங்கள் கூற ''நல்லதாக
எது இருக்கிறதோ அதற்கு பதிலாக
மிகத்தாழ்வானதை
நீங்கள் மாற்றிக்
கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள்
ஏதேனும் ஒரு பட்டணத்தில்
இறங்கி விடுங்கள்; அங்கு
நீங்கள் கேட்பது
நிச்சயமாக உங்களுக்குக்
கிடைக்கும்""
என்று அவர் கூறினார்.
வறுமையும் இழிவும்
அவர்கள் மீது
சாட்டப்பட்டு
விட்டன மேலும்
அல்லாஹ்வின்
கோபத்திற்கும்
அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால்
திடமாகவே அவர்கள்
அல்லாஹ்வின்
வசனங்களை நிராகரித்தும் அநியாயமாக
அவர்கள் நபிமார்களைக்
கொலை செய்து வந்ததும்தான்.
இந்த நிலை அவர்கள்
(அல்லாஹ்வுக்குப்
பணியாது) மாறு
செய்து வந்ததும் (அல்லாஹ் விதித்த)
வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும்
ஏற்பட்டது. 2:62. ஈமான்
கொண்டவர்களாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியீன்களாயினும்
நிச்சயமாக எவர்
அல்லாஹ்வின்
மீதும் இறுதி
நாள் மீதும் நம்பிக்கை
கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள்
செய்கிறார்களோ
அவர்களின் (நற்)
கூலி நிச்சயமாக
அவர்களுடைய இறைவனிடம்
இருக்கிறது மேலும் அவர்களுக்கு
யாதொரு பயமும்
இல்லை அவர்கள்
துக்கப்படவும்
மாட்டார்கள்.
2:63. இன்னும் நாம் உங்களிடம்
வாக்குறுதி வாங்கி 'தூர் மலையை
உங்கள் மேல் உயர்த்தி ''நாம் உங்களுக்கு
கொடுத்த (வேதத்)தை
உறுதியுடன் பற்றிக்
கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
(அப்படிச் செய்வீர்களானால்)
நீங்கள் பயபக்தியுடையோர்
ஆவீர்கள்"" (என்று
நாம் கூறியதையும்
நினைவு கூறுங்கள்).
2:64. அதன்
பின்னும் நீங்கள்
(உங்கள் வாக்குறுதியைப்)
புறக்கணித்து
(மாறி) விட்டீர்கள்; உங்கள்
மீது அல்லாஹ்வின்
கருணையும் அவன்
அருளும் இல்லாவிட்டால்
நீங்கள்(முற்றிலும்)
நஷ்டவாளிகளாக
ஆகியிருப்பீர்கள். 2:65. உங்க(ள்
முன்னோர்க)ளிலிருந்து
சனிக்கிழமையன்று
(மீன் பிடிக்கக்
கூடாது என்ற) வரம்பை
மீறியவர்களைப்பற்றி
நீங்கள் உறுதியாக
அறிவீர்கள். அதனால்
அவர்களை நோக்கி
''சிறுமையடைந்த
குரங்குகளாகி
விடுங்கள்"" என்று
கூறினோம். 2:66. இன்னும் நாம் இதனை
அக்காலத்தில்
உள்ளவர்களுக்கும் அதற்குப்
பின் வரக்கூடியவர்களுக்கும்
படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு
நல்ல உபதேசமாகவும்
ஆக்கினோம். 2:67. இன்னும்
(இதையும் நினைவு
கூறுங்கள்;) மூஸா தம்
சமூகத்தாரிடம் ''நீங்கள்
ஒரு பசுமாட்டை
அறுக்க வேண்டும்
என்று நிச்சயமாக
அல்லாஹ் உங்களுக்குக்
கட்டளையிடுகிறான்""
என்று சொன்னபோது அவர்கள்; ''(மூஸாவே!)
எங்களை பரிகாசத்திற்கு
ஆளாக்குகின்றீரா?"" என்று
கூறினர்; (அப்பொழுது)
அவர் ''(அப்படிப்
பரிகசிக்கும்)
அறிவீனர்களில்
ஒருவனாக நான்
ஆகிவிடாமல் அல்லாஹ்விடம்
பாதுகாப்புத்
தேடுகிறேன்""
என்று கூறினார். 2:68. ''அது எத்தகையது
என்பதை எங்களுக்கு
விளக்கும்படி
உம் இறைவனிடம்
எங்களுக்காக
வேண்டுவீராக!""
என்றார்கள். ''அப்பசு
மாடு அதிகக் கிழடுமல்ல கன்றுமல்ல அவ்விரண்டிற்கும்
இடைப்பட்டதாகும்.
எனவே 'உங்களுக்கு
இடப்பட்ட கட்டளையை
நிறைவேற்றுங்கள்"
என்று அவன் (அல்லாஹ்)
கூறுவதாக"" (மூஸா)
கூறினார். 2:69. ''அதன் நிறம்
யாது!"" என்பதை
விளக்கும்படி
நமக்காக உம் இறைவனை
வேண்டுவீராக!""
என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; ''திடமாக
அது மஞ்சள் நிறமுள்ள
பசு மாடு; கெட்டியான
நிறம்; பார்ப்பவர்களுக்குப்
பரவசம் அளிக்கும்
அதன் நிறம் என
அ(வ்விறை)வன் அருளினான்""
என்று மூஸா கூறினார். 2:70. ''உமது இறைவனிடத்தில்
எங்களுக்காக
பிரார்த்தனை
செய்வீராக! அவன்
அது எப்படிப்பட்டது
என்பதை எங்களுக்கு
தெளிவு படுத்துவான்.
எங்களுக்கு எல்லாப்
பசுமாடுகளும்
திடனாக ஒரே மாதிரியாகத்
தோன்றுகின்றன அல்லாஹ் நாடினால்
நிச்சயமாக நாம்
நேர்வழி பெறுவோம்""
என்று அவர்கள்
கூறினார்கள்.
2:71. அவர்(மூஸா)''நிச்சயமாக
அப்பசுமாடு நிலத்தில்
உழவடித்தோ நிலத்திற்கு
நீர் பாய்ச்சவோ
பயன்படுத்தப்படாதது ஆரோக்கியமானது எவ்விதத்திலும்
வடுவில்லாதது
என்று இறைவன்
கூறுகிறான்""
எனக் கூறினார்.
''இப்பொழுதுதான்
நீர் சரியான விபரத்தைக்
கொண்டு வந்தீர்""
என்று சொல்லி
அவர்கள் செய்ய
இயலாத நிலையில்
அப்பசு மாட்டை
அறுத்தார்கள். 2:72. ''நீங்கள்
ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி
(ஒருவருக்கொருவர்
குற்றம் சாட்டித்)
தர்க்கித்துக்
கொண்டிருந்தீர்கள்; ஆனால்
அல்லாஹ் நீங்கள்
மறைத்ததை வெளியாக்குபவனாக
இருந்தான் (என்பதை
நினைவு கூறுங்கள்). 2:73. ''(அறுக்கப்பட்ட
அப்பசுவின்) ஒரு
துண்டால் அ(க்கொலை
யுண்டவனின் சடலத்)தில்
அடியுங்கள்""
என்று நாம் சொன்னோம்.
இவ்வாறே அல்லாஹ்
இறந்தவர்களை
உயிர்ப்பிக்கிறான்; நீங்கள்
(நல்ல) அறிவு பெறும்
பொருட்டுத் தன்
அத்தாட்சிகளையும்
அவன்(இவ்வாறு)
உங்களுக்குக்
காட்டுகிறான். 2:74. இதன்
பின்னரும் உங்கள்
இதயங்கள் இறுகி
விட்டன அவை கற்பாறையைப்போல்
ஆயின அல்லது (அதை விடவும்)அதிகக்
கடினமாயின (ஏனெனில்)
திடமாகக் கற்பாறைகள்
சிலவற்றினின்று
ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு.
இன்னும் சில பிளவுபட்டுத்
திடமாக அவற்றினின்று
தண்ணீர் வெளிப்படக்
கூடியதுமுண்டு.
இன்னும் திடமாக அல்லாஹ்வின்
மீதுள்ள அச்சத்தால்
சில(கற்பாறைகள்)
உருண்டு விழக்கூடியவையும்
உண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள்
செய்து வருவது
பற்றி கவனிக்காமல்
இல்லை. 2:75. (முஸ்லிம்களே!)
இவர்கள் (யூதர்கள்)
உங்களுக்காக
நம்பிக்கை கொள்வார்கள்
என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில்
ஒருசாரார் இறைவாக்கைக்
கேட்டு; அதை விளங்கிக்
கொண்ட பின்னர் தெரிந்து
கொண்டே அதை மாற்றி
விட்டார்கள். 2:76. மேலும்
அவர்கள் ஈமான்
கொண்டவர்களை
சந்திக்கும்போது ''நாங்களும்
ஈமான் கொண்டிருக்கிறோம்""
என்று சொல்கிறார்கள்; ஆனால்
அவர்களுள் சிலர்
(அவர்களுள்) சிலருடன்
தனித்திடும்போது ''உங்கள்
இறைவன் முன் உங்களுக்கு
எதிராக அவர்கள்
வாதாடு வதற்காக
அல்லாஹ் உங்களுக்கு
அறிவித்துத்
தந்த (தவ்ராத்)தை
அவர்களுக்கு
எடுத்துச் சொல்கிறீர்களா (இதை) நீங்கள்
உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள்
சிலர்) கூறுகின்றனர். 2:77. அவர்கள்
மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும்
நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிவான் என்பதை
அவர்கள் அறிய
மாட்டார்களா? 2:78. மேலும்
அவர்களில் எழுத்தறிவில்லாதோரும்
இருக்கின்றனர்; கட்டுக்
கதைகளை(அறிந்து
வைத்திருக்கிறார்களே)
தவிர வேதத்தை
அறிந்து வைத்திருக்கவில்லை.
மேலும் அவர்கள்
(ஆதாரமற்ற) கற்பனை
செய்வோர்களாக
அன்றி வேறில்லை. 2:79.அற்பக்
கிரயத்தைப் பெறுவதற்காகத்
தம் கரங்களாலே
நு}லை எழுதிவைத்துக்
கொண்டு பின்னர்
அது அல்லாஹ்விடமிருந்து
வந்தது என்று
கூறுகிறார்களே அவர்களுக்கு
கேடுதான்! அவர்களுடைய
கைகள் இவ்வாறு
எழுதியதற்காகவும்
அவர்களுக்குக்
கேடுதான்; அதிலிருந்து
அவர்கள் ஈட்டும்
சம்பாத்தியத்திற்காகவும்
அவர்களுக்குக்
கேடுதான்! 2:80. ''ஒரு சில
நாட்கள் தவிர
எங்களை நரக நெருப்புத்
தீண்டாது"" என்று
அவர்கள் கூறுகிறார்கள்.
''அல்லாஹ்விடமிருந்து
அப்படி ஏதேனும்
உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின்
அல்லாஹ் தன் உறுதி
மொழிக்கு மாற்றம்
செய்யவே மாட்டான்; அல்லது
நீங்கள் அறியாததை
அல்லாஹ் சொன்னதாக
இட்டுக் கட்டிக்
கூறுகின்றீர்களா?"" என்று
(நபியே! அந்த யூதர்களிடம்)
நீர் கேளும். 2:81. அப்படியல்ல!
எவர் தீமையைச்
சம்பாதித்து அந்தக் குற்றம்
அவரைச் சூழ்ந்து
கொள்கிறதோ அத்தகையோர்
நரகவாசிகளே அவர்கள் அ(ந்நரகத்)தில்
என்றென்றும்
இருப்பார்கள். 2:82. எவர்
நம்பிக்கை கொண்டு
நற்கருமங்களைச்
செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள்
அங்கு என்றென்றும்
இருப்பார்கள். 2:83. இன்னும்(நினைவு
கூறுங்கள்;) நாம் (யஃகூப்
என்ற) இஸ்ராயீல்
மக்களிடத்தில் ''அல்லாஹ்வைத்
தவிர வேறு எவரையும்-எதனையும்
நீங்கள் வணங்கக்கூடாது (உங்கள்)பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் மிஸ்கீன்(களான
ஏழை)களுக்கும்
நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்
அழகானதைப் பேசுங்கள்; மேலும்
தொழுகையை முறையாகக்
கடைப்பிடித்து
வாருங்கள்; ஜக்காத்தையும்
ஒழுங்காகக் கொடுத்து
வாருங்கள்"" என்று
உறுதிமொழியை
வாங்கினோம். ஆனால்
உங்களில் சிலரைத்
தவிர (மற்ற யாவரும்
உறுதி மொழியை
நிறைவேற்றாமல் அதிலிருந்து)
புரண்டுவிட்டீர்கள் இன்னும் நீங்கள்
புறக்கணித்தவர்களாகவே
இருக்கின்றீர்கள். 2:84. இன்னும்
(நினைவு கூறுங்கள்;) ''உங்களிடையே
இரத்தங்களைச்
சிந்தாதீர்கள்; உங்களில்
ஒருவர் மற்றவரை
தம் வீடுகளை விட்டும்
வெளியேற்றாதீர்கள்""
என்னும் உறுதிமொழியை
வாங்கினோம். பின்னர்
(அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு)
நீங்களே சாட்சியாகவும்
இருந்தீர்கள். 2:85. (இவ்வாறு
உறுதிப்படுத்திய)
நீங்களே உங்களிடையே
கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே
ஒருசாராரை அவர்களுடைய
வீடுகளிலிருந்து
வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது
அக்கிரமம் புரியவும் பகைமை கொள்ளவும்
(அவர்களின் விரோதிகளுக்கு)
உதவி செய்கிறீர்கள்.
வெளியேற்றப்பட்டவர்கள்
(இவ்விரோதிகளிடம்
சிக்கி) கைதிகளாக
உங்களிடம் வந்தால் (அப்பொழுது
மட்டும் பழிப்புக்கு
அஞ்சி) நஷ்டஈடு
பெற்றுக்கொண்டு
(அவர்களை விடுதலை
செய்து) விடுகிறீர்கள்-ஆனால்
அவர்களை (வீடுகளை
விட்டு) வெளியேற்றுவது
உங்கள் மீது ஹராமா(ன
தடுக்கப்பட்ட
செயலா)கும். (அப்படியென்றால்)
நீங்கள் வேதத்தில்
சிலதை நம்பி சிலதை
மறுக்கிறீர்களா? எனவே உங்களில்
இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு
இவ்வுலக வாழ்வில்
இழிவைத் தவிர
வேறு கூலி எதுவும்
கிடைக்காது. மறுமை(கியாம)
நாளிலோ அவர்கள்
மிகக் கடுமையான
வேதனையின்பால்
மீட்டப்படுவார்கள்; இன்னும்
நீங்கள் செய்து
வருவதை அல்லாஹ்
கவனிக்காமல்
இல்லை. 2:86. மறுமை(யின்
நிலையான வாழ்க்கை)க்குப்
பகரமாக (அற்பமாள)
இவ்வுலக வாழ்க்கையை
விலைக்கு வாங்கிக்
கொண்டவர்கள்
இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு
(ஒரு சிறிதளவும்)
வேதனை இலேசாக்கப்பட
மாட்டாது. இவர்கள்
உதவியும் செய்யப்படமாட்டார்கள். 2:87. மேலும் நாம் மூஸாவுக்கு
நிச்சயமாக வேதத்தைக்
கொடுத்தோம். அவருக்குப்பின்
தொடர்ச்சியாக
(இறை) து}தர்களை
நாம் அனுப்பினோம்; இன்னும் மர்யமின்
குமாரர் ஈஸாவுக்குத்
தெளிவான அத்தாட்சிகளைக்
ரூஹ{ல் குதுஸி
(என்னும் பரிசுத்த
ஆத்மாவைக்) கொண்டு
அவருக்கு வலுவூட்டினோம்.
உங்கள் மனம் விரும்பாததை(நம்)
து}தர் உங்களிடம்
கொண்டு வரும்போதெல்லாம்
நீங்கள் கர்வம்
கொண்டு (புறக்கணித்து)
வந்தீர்களல்லவா? சிலரை
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை
கொன்றீர்கள். 2:88. இன்னும் அவர்கள் (யூதர்கள்)
''எங்களுடைய
இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன""
என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய
(குஃப்ரு என்னும்)
நிராகரிப்பின்
காரனத்தால் அல்லாஹ் அவர்களைச்
சபித்து விட்டான்.
ஆகவே அவர்கள்
சொற்பமாகவே ஈமான்
கொள்வார்கள். 2:89. அவர்களிடம்
இருக்கக்கூடிய
வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய
(இந்த குர்ஆன்
என்ற) வேதம் அவர்களிடம்
வந்தது. இ(ந்த குர்ஆன்
வருவ)தற்கு முன்
காஃபிர்களை வெற்றி
கொள்வதற்காக
(இந்த குர்ஆன்
முலமே அல்லாஹ்விடம்)
வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
(இவ்வாறு முன்பே)
அவர்கள் அறிந்து
வைத்திருந்த(வேதமான)து
அவர்களிடம் வந்த
போது அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி
நிராகரிப்போர்
மீது அல்லாஹ்வின்
சாபம் இருக்கிறது! 2:90. தன்
அடியார்களில்
தான் நாடியவர்
மீது தன் அருட்கொடையை
அல்லாஹ் அருளியதற்காக
பொறாமைப்பட்டு அல்லாஹ் அருளியதையே
நிராகரித்து
தங்கள் ஆத்மாக்களை
விற்று அவர்கள்
பெற்றுக் கொண்டது
மிகவும் கெட்டதாகும்.
இதனால் அவர்கள்
(இறைவனுடைய) கோபத்திற்கு
மேல் கோபத்திற்கு
ஆளாகி விட்டார்கள்.
(இத்தகைய) காஃபிர்களுக்கு
இழிவான வேதனை
உண்டு. 2:91. ''அல்லாஹ்
இறக்கி வைத்த
(திருக்குர்ஆன்
மீது) ஈமான் கொள்ளுங்கள்""
என்று அவர்களுக்கு
சொல்லப்பட்டால் ''எங்கள்
மீது இறக்கப்பட்டதன்
மீதுதான் நம்பிக்கை
கொள்வோம்"" என்று
கூறுகிறார்கள்; அதற்கு
பின்னால் உள்ளவற்றை
நிராகரிக்கிறார்கள்.
ஆனால் இதுவோ(குர்ஆன்)
அவர்களிடம் இருப்பதை
உண்மைப் படுத்துகிறது.
''நீங்கள் உண்மை
விசுவாசிகளாக
இருந்தால் ஏன் அல்லாஹ்வின்
முந்திய நபிமார்களை
நீங்கள் கொலை
செய்தீர்கள்?"" என்று
அவர்களிடம் (நபியே!)
நீர் கேட்பீராக. 2:92. நிச்சயமாக
மூஸா உங்களிடம்
தெளிவான அத்தாட்சிகளைத்
கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்)
அதன்பின் காளை
மாட்டை (இணை வைத்து)
வணங்கினீர்கள்; (இப்படிச்
செய்து) நீங்கள்
அக்கிரமக்காரர்களாகி
விட்டீர்கள். 2:93. தூர் மலையை
உங்கள் மேல் உயர்த்தி
நாம் உங்களுக்குக்
கொடுத்த (தவ்ராத்)தை
உறுதியுடன் பற்றிக்
கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள்.
என்று உங்களிடம்
நாம் வாக்குறுதி
வாங்கினோம். (அதற்கு
அவர்கள்) நாங்கள்
செவியேற்றோம்; மேலும்(அதற்கு)
மாறு செய்தோம்
என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள்
நிராகரித்த காரணத்தினால்
அவர்கள் இதயங்களில்
காளைக்கன்றின்
(பக்தி) புகட்டப்பட்டது.
நீங்கள் முஃமின்களாக
இருந்தால் உங்களுடைய
ஈமான் எதை கட்டளையிடுகிறதோ
அது மிகவும் கெட்டது
என்று (நபியே!) நீர்
கூறும். 2:94. (நபியே!)
''இறைவனிடத்தில்
உள்ள மறுமையின்
வீடு (சுவர்க்கம்)
உங்களுக்கே சொந்தமானது வேறு மனிதர்களுக்குக்
கிடையாது என்று
உரிமை கொண்டாடுவதில்
நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால் (அதைப் பெறுவதற்காக)
மரணத்தை விரும்புங்கள்""
என்று (நபியே!) நீர்
சொல்வீராக. 2:95. ஆனால் அவர்கள் கரங்கள்
செய்த (பாவங்களை)
அவர்கள் முன்னமேயே
அனுப்பி வைத்திருந்த
காரணத்தால் அவர்கள்
மரணத்தை விரும்பவே
மாட்டார்கள்.
நிச்சயமாக அல்லாஹ்
அந்த அக்கிரமக்காரர்களை
நன்கு அறிந்தவனாகவே
இருக்கிறான். 2:96. அவர்கள் மற்ற மனிதர்களைவிட இணை வைக்கும்
முஷ்ரிக்குகளையும்
விட (இவ்வுலக) வாழ்க்கையில்
பேராசை உடையவர்களாக
இருப்பதை (நபியே!)
நீர் நிச்சயமாகக்
காண்பீர்; அவர்களில்
ஒவ்வொருவரும்
ஆயிரம் ஆண்டுகள்
வாழவேண்டும்
என ஆசைப்படுகிறார்கள்; ஆனால்
அப்படி அவர்களுக்கு
நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும் அவர்கள் இறைவனின்
தண்டனையிலிருந்து
தப்ப முடியாது.
இன்னும் அல்லாஹ்
அவர்கள் செய்வதையெல்லாம்
கூர்ந்து பார்ப்பவனாகவே
இருக்கிறான். 2:97. யார்
ஜிப்hPலுக்கு
விரோதியாக இருக்கின்றானோ
(அவன் அல்லாஹ்வுக்கும்
விரோதி யாவான்)
என்று (நபியே!) நீர்
கூறும்; நிச்சயமாக
அவர்தாம் அல்லாஹ்வின்
கட்டளைக்கிணங்கி
உம் இதயத்தில்
(குர்ஆனை) இறக்கி
வைக்கிறார்; அது தனக்கு முன்னிருந்த
வேதங்கள் உண்மை
என உறுதிப்படுத்துகிறது.
இன்னும் அது வழிகாட்டியாகவும் நம்பிக்கை
கொண்டோருக்கு
நன்மாராயமாகவும்
இருக்கிறது. 2:98. எவன்
அல்லாஹ்வுக்கும் அவனுடைய மலக்குகளுக்கும் அவனுடைய து}தர்களுக்கும் ஜிப்hPலுக்கும் மீக்காயிலுக்கும்
பகைவனாக இருக்கிறானோ நிச்சயமாக
(அவ்வாறு நிராகரிக்கும்)
காஃபிர்களுக்கு
அல்லாஹ் பகைவனாகவே
இருக்கிறான். 2:99. (நபியே!)
நிச்சயமாக நாம்
மிகத்தெளிவான
வசனங்களை உம்மீது
இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத்
தவிர (வேறு எவரும்)
அவற்றை நிராகரிக்க
மாட்டார்கள். 2:100. மேலும் அவர்கள் உடன்படிக்கை
செய்தபோதெல்லாம் அவர்களில்
ஒரு பிரிவினர்
அவற்றை முறித்து
விடவில்லையா? ஆகவே அவர்களில்
பெரும்பாலோர்
ஈமான் கொள்ள மாட்டார்கள். 2:101. அவர்களிடம்
உள்ள(வேதத்)தை
மெய்ப்பிக்கும்
ஒரு து}தர் அல்லாஹ்விடமிருந்து
அவர்களிடம் வந்த
போது வேதம்
வழங்கப்பட்டோரில்
ஒரு பிரிவினர்
அல்லாஹ்வின்
வேதத்தைத் தாங்கள்
ஏதும் அறியாதவர்கள்
போல் தங்கள் முதுகுக்குப்
பின்னால் எறிந்து
விட்டார்கள். 2:102. அவர்கள்
ஸ{லைமானின்
ஆட்சிக்கு எதிராக
ஷைத்தான்கள்
ஓதியவற்றையே
பின்பற்றினார்கள்;. ஆனால்
ஸ{லைமான் ஒருபோதும்
நிராகரித்தவர்
அல்லர். ஷைத்தான்கள்
தாம் நிராகரிப்பவர்கள்.
அவர்கள்தாம்
மனிதர்களுக்குச்
சூனியத்தைக்
கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும் பாபில் (பாபிலோன்
என்னும் ஊரில்)
ஹாருத் மாருத்
என்ற இரண்டு மலக்குகளுக்கு
இறக்கப்பட்டதையும்
(தவறான வழியில்
பிரயோகிக்கக்
கற்றுக்கொடுத்தார்கள்).
ஆனால் அவர்கள்
(மலக்குகள்) இருவரும்; ''நிச்சயமாக
நாங்கள் சோதனையாக
இருக்கிறோம்; (இதைக்
கற்று) நீங்கள்
நிராகரிக்கும்
காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்""
என்று சொல்லி
எச்சரிக்காத
வரையில் எவருக்கும்
இ(ந்த சூனியத்)தைக்
கற்றுக் கொடுக்கவில்லை அப்படியிருந்தும்
கணவன் - மனைவியிடையே
பிரிவை உண்டாக்கும்
செயலை அவர்களிடமிருந்து
கற்றுக்கொண்டார்கள்.
எனினும் அல்லாஹ்வின்
கட்டளையின்றி
அவர்கள் எவருக்கும்
எத்தகைய தீங்கும்
இதன் மூலம் இழைக்க
முடியாது. தங்களுக்குத்
தீங்கிழைப்பதையும் எந்த வித நன்மையும்
தராததையுமே - கற்றுக்
கொண்டார்கள்.
(சூனியத்தை) விலை
கொடுத்து வாங்கிக்
கொண்டவர்களுக்கு மறுமையில்
யாதொரு பாக்கியமும்
இல்லை என்பதை
அவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
அவர்கள் தங்கள்
ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது
கெட்டதாகும்.
இதை அவர்கள் அறிந்து
கொள்ள வேண்டாமா? 2:103. அவர்கள்
நம்பிக்கை கொண்டு
தங்களை காப்பாற்றிக்
கொண்டால் அல்லாஹ்விடமிருந்து
கிடைக்கும் நற்கூலி
மிகவும் மேலானதாக
இருக்கும்;. இதனை அவர்கள்
அறிய வேண்டாமா? 2:104. ஈமான்
கொண்டோரே! நீங்கள்
(நம் ரஸ_லைப் பார்த்து
இரண்டு அர்த்தம்
கொடுக்கும் சொல்லாகிய)
'ராயினா" என்று
சொல்லாதீர்கள்.
(இதற்குப் பதிலாக
அன்புடன் நோக்குவீர்களாக
என்னும் பொருளைத்
தரும் சொல்லாகிய)
'உன்ளுர்னா"
என்று கூறுங்கள்.
இன்னும் அவர் சொல்வதைக்
கேளுங்கள். மேலும்
காஃபிர்களுக்குத்
துன்பம் தரும்
வேதனையும் உண்டு. 2:105. அஹ்லுல்
கிதாப்(வேதத்தையுடையவர்களில்)
நிராகரிப்போரோ இன்னும் முஷ்ரிக்குகளோ
உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது
நன்மை இறக்கப்படுவதை
விரும்பவில்லை.
ஆனால் அல்லாஹ்
தன் அருட்கொடைக்கு
உரியவர்களாக
யாரை நாடுகிறானோ
அவரையே தேர்ந்தெடுத்துக்
கொள்கிறான்;. அல்லாஹ்
மிகப் பெரும்
கிருபையாளன். 2:106. ஏதேனும்
ஒரு வசனத்தை நாம்
மாற்றினால் அல்லது
அதனை மறக்கச்
செய்தால் அதைவிட
சிறந்ததையோ அல்லது
அது போன்றதையோ
நாம் கொண்டுவருவோம்.
நிச்சயமாக அல்லாஹ்
அனைத்துப்பொருட்களின்
மீதும் சக்தியுள்ளவன்
என்பதை நீர் அறியவில்லையா? 2:107. நிச்சயமாக
வானங்கள் பூமியின்
ஆட்சி அல்லாஹ்வுக்கே
உரியது. அல்லாஹ்வையன்றி
உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ
இல்லை என்பதை
நீர் அறியவில்லையா? 2:108. இதற்கு
முன்னர் மூஸாவிடம்
கேள்விகள் கேட்கப்பட்ட
மாதிரி நீங்களும்
உங்கள் ரஸ_லிடம்
கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன்
ஈமானை 'குஃப்ரினால்"
மாற்றுகிறானோ
அவன் நிச்சயமாக
நேர் வழியினின்றும்
தவறிவிட்டான். 2:109. வேதத்தை
உடையவர்களில்
பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு
தெளிவாகத்தெரிந்த
பின்னரும் தங்கள் மனதில்
உள்ள பொறாமையினால்
நீங்கள் நம்பிக்கை
கொண்டபின் காஃபிர்களாக
மாற வேண்டுமென
விரும்புகிறார்கள்.
ஆனால் அல்லாஹ்வின்
கட்டளை வரும்வரை
அவர்களை மன்னித்து அவர்கள் போக்கிலே
விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக
அல்லாஹ் அனைத்துப்
பொருட்கள் மீதும்
சக்தி உடையவனாக
இருக்கிறான். 2:110. இன்னும்
தொழுகையை முறையாகக்
கடைப்பிடித்தும்; ஜகாத்
கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில்
உங்களுக்காக
எந்த நன்மையை
முன்னமேயே அனுப்பி
வைக்கின்றீர்களோ அதை அல்லாஹ்விடம்
பெற்றுக்கொள்வீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றையெல்லாம்
உற்று நோக்கியவனாகவே
இருக்கிறான். 2:111. ''யூதர்கள் கிறிஸ்தவர்களைத்
தவிர வேறு யாரும்
சுவனபதியில்
நுழையவே மாட்டார்கள்""
என்று அவர்கள்
கூறுகிறார்கள்; இது அவர்களின்
வீணாசையேயாகும்; ''நீங்கள்
உண்மையுடையோராக
இருந்தால் உங்களுடைய
சான்றை சமர்ப்பியுங்கள்""
என்று (நபியே!) நீர்
கூறுவீராக! 2:112. அப்படியல்ல!
எவனொருவன் தன்னை
அல்லாஹ்வுக்கே
(முழுமையாக) அர்ப்பணம்
செய்து இன்னும்
நற்கருமங்களைச்
செய்கிறானோ அவனுடைய நற்கூலி
அவனுடைய இறைவனிடம்
உண்டு. இத்தகையோருக்கு
அச்சமில்லை அவர்கள்
துக்கப்படவும்
மாட்டார்கள். 2:113. யூதர்கள்
கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள்
எந்த நல்வழியிலும்
இல்லை" என்று.
கிறிஸ்தவர்கள்
கூறுகிறார்கள்; 'யூதர்கள்
எந்த நல்வழியிலும்
இல்லை" என்று.
ஆனால் இவர்கள்
(தங்களுக்குரிய)
வேதத்தை ஓதிக்கொண்டே
(இப்படிக் கூறுகிறார்கள்)
இவர்கள் கூறும்
சொற்களைப் போலவே
ஒன்றும் அறியாதவர்களும்
கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு
நாளில் அல்லாஹ்
இவர்கள் தர்க்கித்து
மாறுபட்டுக்
கொண்டிருக்கும்
விஷயத்தில் தீர்ப்பளிப்பான். 2:114. இன்னும் அல்லாஹ்வுடைய
மஸ்ஜிதுகளில்
அல்லாஹ்வின்
பெயரைச் சொல்லித்
துதிப்பதைத்
தடுத்து இவற்றைப்
பாழாக்க முயல்பவனை
விட பெரிய
கொடுமைக்காரன்
யார் இருக்க முடியும்? இத்தகையோர்
அச்சமுடனன்றி
பள்ளிவாயில்களில்
நுழைவதற்கு தகுதியே
இல்லாதவர்கள் இவர்களுக்கு
இவ்(வுலக) வாழ்வில்
இழிவுதான்; மேலும் மறுமையில்
இவர்களுக்குக்
கடுமையான வேதனையும்
உண்டு. 2:115. கிழக்கும் மேற்கும்
அல்லாஹ்வுக்கே
(சொந்தம்) நீங்கள்
எந்தப் பக்கம்
திரும்பினாலும்
அங்கே அல்லாஹ்வின்
முகம் இருக்கிறது.
நிச்சயமாக அல்லாஹ்
விசாலமானவன்; எல்லாம்
அறிந்தவன். 2:116. இன்னும்
கூறுகிறார்கள்; ''அல்லாஹ்
ஒரு குமாரனைப்
பெற்றிருக்கிறான்""
என்று. அப்படியல்ல
- அவன் (இவர்கள்
கூறுவதிலிருந்து)
மிகத் து}ய்மையானவன்; வானங்கள் பூமியில்
உள்ளவை யாவும்
அவனுக்கே உரியவை.
இவையனைத்தும்
அவனுக்கே அடிபணிந்து
வழிபடுகின்றன. 2:117. (அல்லாஹ்)
வானங்களையும் பூமியையும்
முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து) தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை
உண்டாக்க விதித்து அதனிடம் 'குன்"
- ஆகுக- என்று கூறினால் உடனே அது ஆகிவிடுகிறது. 2:118. இன்னும்
அறியாதவர்கள்
கூறுகிறார்கள்; ''அல்லாஹ்
ஏன் நம்மிடம்
பேசவில்லை மேலும் நமக்கு ஏன்
அத்தாட்சி வரவில்லை?"" என்று.
இவர்களுக்கு
முன்னர் இருந்தவர்களும்
இப்படியே - இவர்களின்
சொற்களைப்போலவே
- தான் கூறினார்கள்.
இவர்களின் இதயங்கள்
அவர்களுடைய இதயங்களைப்
போன்றவையே தான்.
ஈமானில் உறுதியுடைய
மக்களுக்கு நம்
அத்தாட்சிகளை
(அவர்கள் மனதில்
பதியும்படி) நாம்
நிச்சயமாகத்
தெளிவாய் விவரித்துள்ளோம். 2:119. (நபியே!)
நாம் உம்மை உண்மையுடன் (நல்லடியாருக்கு)
நன்மாராயம் கூறுபவராகவும் (தீயோருக்கு)
அச்சமுட்டி எச்சரிக்கை
செய்பவராகவுமே
அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப்
பற்றி நீர் வினவப்பட
மாட்டீர். 2:120. (நபியே!)
யூதர்களும் கிறிஸ்தவர்களும்
அவர்கள் வழியை
நீர் பின்பற்றாதவரையில்
உம்மைப்பற்றி
திருப்தியடைய
மாட்டார்கள்.
(ஆகவே அவர்களை
நோக்கி;) ''நிச்சயமாக
அல்லாஹ்வின்
வழி-(இஸ்லாம்) அதுவே
நேர்வழி"" என்று
சொல்லும்;. அன்றி
ஞானம் உம்மை வந்தடைந்த
பின்னரும் அவர்களுடைய
இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால் அல்லாஹ்விடமிருந்து
உம்மைக் காப்பாற்றுபவனும் உமக்கு உதவி
செய்பவனும் இல்லை. 2:121. யாருக்கு
நாம் வேதத்தைக்
கொடுத்தோமோ அவர்கள்
அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட
வேண்டுமோ அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள்
தாம் அதன் மேல்
நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை
நிராகரிக்கின்றார்களோ
அவர்கள் பெரும்
நஷ்டவாளிகளே! 2:122. (யஃகூப்
என்ற) இஸ்ராயீலின்
மக்களே! நான் உங்களுக்கு
அளித்த என் நன்கொடைகளை
நினைவு கூறுங்கள்;. இன்னும்
நிச்சயமாக நான்
உங்களை உலக மக்கள்
எல்லோரையும்விட
மேம்பாடுடையோராகச்
செய்தேன். 2:123. இன்னும் (வரப் போகும்)
அந்நாளிலிருந்து உங்களைக்
காப்பாற்றிக்
கொள்ளுங்கள்;. அன்று
ஓர் ஆத்மா பிறிதோர்
ஆத்மாவுக்கு
உதவி செய்ய இயலாது.
அதனிடமிருந்து
(அதன் பாவங்களுக்குப்
பரிகாரமாக) எந்த
நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட
மாட்டாது. எந்த
சிபாரிசும் அதற்கு
பலனளிக்காது.
அவர்கள்(எவர்
மூலமாகவும் எந்த)
உதவியும் செய்யப்பட
மாட்டார்கள். 2:124. (இன்னும்
இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை
அவருடைய இறைவன்
சில கட்டளைகளையிட்டுச்
சோதித்தான்;. அவற்றை
அவர் முழுமையாக
நிறைவேற்றினார்;. நிச்சயமாக
நான் உம்மை மக்களுக்கு
இமாமாக(த் தலைவராக)
ஆக்குகிறேன்""
என்று அவன் கூறினான்;. அதற்கு
இப்ராஹீம்; ''என் சந்ததியினரிலும்(இமாம்களை
ஆக்குவாயா?)"" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம்
சந்ததியிலுள்ள)
அநியாயக்காரர்களுக்குச்
சேராது என்று
கூறினான். 2:125. (இதையும்
எண்ணிப் பாருங்கள்; ''கஃபா என்னும்)
வீட்டை நாம் மக்கள்
ஒதுங்கும் இடமாகவும்
இன்னும் பாதுகாப்பான
இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம்
நின்ற இடத்தை
- மகாமு இப்ராஹீமை
- தொழும் இடமாக
நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்""
(என்றும் நாம்
சொன்னோம்). இன்னும்
'என் வீட்டைச்
சுற்றி வருபவர்கள் தங்கியிருப்பவர்கள் ருகூஃ செய்பவர்கள் ஸ{ஜூது செய்பவர்கள்
ஆகியோருக்காகத்
து}ய்மையாக
அதனை வைத்திருக்க
வேண்டும்" என்று
இப்ராஹீமிடமிருந்தும் இஸ்மாயீலிடமிருந்தும்
நாம் உறுதி மொழி
வாங்கினோம். 2:126. (இன்னும்
நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; ''இறைவா!
இந்தப் பட்டணத்தைப்
பாதுகாப்பான
இடமாக ஆக்கி வைப்பாயாக!
இதில் வசிப்போரில்
யார் அல்லாஹ்வையும்
இறுதி நாளையும்
நம்புகிறார்களோ
அவர்களுக்குப்
பல வகைக் கனிவர்க்கங்களையும்
கொண்டு உணவளிப்பாயாக""
என்று கூறினார்;. அதற்கு இறைவன்
கூறினான்; ''(ஆம்;) யார் நம்பிக்கை
கொள்ளவில்லையோ
அவனுக்கும் சிறிது
காலம் சுகானுபவத்தை
அளிப்பேன்"" பின்னர்
அவனை நரக நெருப்பின்
வேதனையில் நிர்பந்திப்பேன்.
அவன் சேரும் இடம்
மிகவும் கெட்டதே."" 2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும்
இவ்வீட்டின்
அடித்தளத்தை
உயர்த்திய போது ''எங்கள்
இறைவனே! எங்களிடமிருந்து
(இப்பணியை) ஏற்றுக்
கொள்வாயாக நிச்சயமாக
நீயே (யாவற்றையும்)
கேட்பவனாகவும்
அறிபவனாகவும்
இருக்கின்றாய்""
(என்று கூறினர்). 2:128. ''எங்கள்
இறைவனே! எங்கள்
இருவரையும் உன்னை
முற்றிலும் வழிபடும்
முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும்
உன்னை முற்றிலும்
வழிபடும் ஒரு
கூட்டத்தினரை
(முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி
வைப்பாயாக நாங்கள் உன்னை
வழிபடும் வழிகளையும்
அறிவித்தருள்வாயாக எங்களை(க்
கருணையுடன் நோக்கி
எங்கள் பிழைகளை)
மன்னிப்பாயாக நிச்சயமாக
நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும்
இருக்கின்றாய்."" 2:129. ''எங்கள்
இறைவனே! அவர்களிடையே
உன்னுடைய வசனங்களை
ஓதிக் காண்பித்து அவர்களுக்கு
வேதத்தையும் ஞானத்தையும்
கற்றுக் கொடுத்து அவர்களைத்
து}ய்மைப்படுத்தக்
கூடிய ஒரு து}தரை அவர்களிலிருந்தே
எழுந்திடச் செய்வாயாக
- நிச்சயமாக நீயே
வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும்
இருக்கின்றாய்."" 2:130. இப்ராஹீமுடைய
மார்க்கத்தைப்
புறக்கணிப்பவன்
யார்?-தன்னைத்
தானே தாழ்த்திக்
கொள்பவனைத் தவிர.
நிச்சயமாக நாம்
அவரை(த் து}ய்மையாளராக)
இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக
அவர் மறுமையில்
நல்லடியார் கூட்டத்திலேயே
இருப்பார். 2:131. இன்னும் அவரிடம் அவருடைய
இறைவன்; ''(என்னிடம்
முற்றிலும் வழிபட்டவராகச்)
சரணடையும்"" என்று
சொன்னபோது அவர் ''அகிலங்களின்
இறைவனுக்கு முற்றிலும்
வழிபட்டோனாகச்
சரணடைந்தேன்""
என்று கூறினார். 2:132. இதையே
இப்ராஹீம் தம்
குமாரார்களுக்கு
வஸிய்யத்து (உபதேசம்)
செய்தார்;. யஃகூபும்
(இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; ''என் குமாரர்களே!
அல்லாஹ் உங்களுக்குச்
சன்மார்க்கத்தை
(இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான்.
நீங்கள் முஸ்லிம்களாக
அன்றி மரணிக்காதீர்கள்."" 2:133. யஃகூபுக்கு
மரணம் நெருங்கியபோது நீங்கள் சாட்சியாக
இருந்தீர்களா? அப்பொழுது
அவர் தம் குமாரர்களிடம்; ''எனக்குப்
பின் நீங்கள்
யாரை வணங்குவீர்கள்?"" எனக் கேட்டதற்கு ''உங்கள்
நாயனை-உங்கள்
மூதாதையர் இப்ராஹீம் இஸ்மாயீல் இஸ்ஹாக் ஆகியோரின்
நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்)
வழிப்பட்ட முஸ்லிம்களாக
இருப்போம்"" எனக்
கூறினர். 2:134. அந்த
உம்மத்து(சமூகம்)
சென்றுவிட்டது அவர்கள் சம்பாதித்தவை
அவர்களுக்கே நீங்கள் சம்பாதித்தவை
உங்களுக்கே! அவர்கள்
செய்து கொண்டிருந்தது
பற்றி நீங்கள்
கேட்கப்பட மாட்டீர்கள். 2:135. ''நீங்கள்
யூதர்களாக அல்லது
கிறிஸ்தவர்களாக
மாறிவிடுங்கள்
- நீங்கள் நேர்வழியை
அடைவீர்கள்""
என்று அவர்கள்
கூறுகிறார்கள்.
''அப்படியல்ல!
(நேரான வழியைச்
சார்ந்த) இப்ராஹீமின்
மார்க்கத்தையே
பின்பற்றுவோம் (இணை வைக்கும்)
முஷ்ரிக்குகளில்
நின்றும் அவரில்லை""
என்று (நபியே!) நீர்
கூறுவீராக! 2:136. (முஃமின்களே!)''நாங்கள்
அல்லாஹ்வையும் எங்களுக்கு
இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம் இஸ்மாயீல் இஸ்ஹாக் யஃகூப் இன்னும்
அவர் சந்ததியினருக்கு
இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும் ஈஸாவுக்கும்
கொடுக்கப்பட்டதையும்
இன்னும் மற்ற
நபிமார்களுக்கும்
அவர்களின் இறைவனிடமிருந்து
கொடுக்கப்பட்டதையும்
நம்புகிறோம் அவர்களில்
நின்றும் ஒருவருக்கிடையேயும்
நாங்கள் வேறுபாடு
காட்ட மாட்டோம்; இன்னும்
நாங்கள் அவனுக்கே
முற்றிலும் வழிபடுகிறோம்""
என்று கூறுவீர்களாக. 2:137. ஆகவே நீங்கள் ஈமான்
கொள்வதைப்போல்
அவர்களும் ஈமான்
கொண்டால் நிச்சயமாக
அவர்கள் நேர்வழியை
பெற்றுவிடுவார்கள்;. ஆனால்
அவர்கள் புறக்கணித்துவிட்டால்
நிச்சயமாக அவர்கள்
பிளவில்தான்
இருக்கின்றனர்.
எனவே அவர்களி(ன்
கெடுதல்களி)லிருந்து
உம்மைக் காப்பாற்ற
அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்)
செவியுறுவோனாகவும் (எல்லாம்) அறிந்தோனுமாகவும்
இருக்கிறான். 2:138. ''(இதுவே)
அல்லாஹ்வின்
வர்ணம்(ஞான ஸ்னானம்)
ஆகும்; வர்ணம்
கொடுப்பதில்
அல்லாஹ்வைவிட
அழகானவன் யார்? அவனையே
நாங்கள் வணங்குகிறோம்""
(எனக் கூறுவீர்களாக). 2:139. அல்லாஹ்வைப்
பற்றி நீங்கள்
எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள்
இறைவனும் உங்கள் இறைவனும்
ஆவான்; எங்கள்
செய்கைகளின்
(பலன்) எங்களுக்கு உங்கள் செய்கைகளின்
(பலன்) உங்களுக்கு மேலும் நாங்கள்
அவனுக்கே கலப்பற்ற
(ஈமான் உடைய)வர்களாக
இருக்கின்றோம்""
என்று (நபியே! அவர்களுக்கு)
நீர் கூறுவீராக. 2:140. ''இப்ராஹீமும் இஸ்மாயீலும் இஸ்ஹாக்கும் யஃகூபும் இன்னும் அவர்களுடைய
சந்ததியினர்
யாவரும் நீச்சயமாக
யூதர்கள் அல்லது
கிறிஸ்தவர்களே""
என்று கூறுகின்றீர்களா? (நபியே!)
நீர் கேட்பீராக
''(இதைப் பற்றி)
உங்களுக்கு நன்றாகத்
தெரியுமா அல்லது
அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து
தன்பால் வந்திருக்கும்
சாட்சியங்களை
மறைப்பவனைவிட
அநியாயக்காரன்
யார்? இன்னும்
அல்லாஹ் நீங்கள்
செய்பவை பற்றி
பராமுகமாக இல்லை."" 2:141. அந்த
உம்மத்து(சமூகம்)
சென்றுவிட்டது.
அவர்கள் சம்பாதித்தவை
அவர்களுக்கே நீங்கள் சம்பாதித்தவை
உங்களுக்கே! அவர்கள்
செய்து கொண்டிருந்தது
பற்றி நீங்கள்
கேட்கப்பட மாட்டீர்கள். 2:142. மக்களில்
அறிவீனர்கள்
கூறுவார்கள்; ''(முஸ்லிம்களாகிய)
அவர்கள் முன்னர்
நோக்கியிருந்த
கிப்லாவை விட்டுத்
திருப்பிவிட்டது
எது?"" என்று.
(நபியே!) நீர் கூறும்; ''கிழக்கும் மேற்கும்
அல்லாஹ்வுக்கே
உரியவை தான் நாடியவரை
அவன் நேர்வழியில்
நடத்திச் செல்வான்""
என்று. 2:143. இதே
முறையில் நாம்
உங்களை ஒரு நடு
நிலையுள்ள உம்மத்தாக
(சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்.
(அப்படி ஆக்கியது)
நீங்கள் மற்ற
மனிதர்களின்
சாட்சியாளர்களாக
இருப்பதற்காகவும் ரஸ_ல் (நம்
து}தர்) உங்கள்
சாட்சியாளராக
இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்)
தூதரைப்
பின்பற்றுகிறார்கள்; யார் (அவரைப்
பின்பற்றாமல்)
தம் இரு குதிங்
கால்கள் மீது
பின்திரும்பி
செல்கிறார்கள்
என்பதை அறி(வித்து
விடு)வான் வேண்டி
கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ்
நேர்வழி காட்டியோருக்குத்
தவிர மற்றவர்களுக்கு
நிச்சயமாக ஒரு
பளுவாகவே இருந்தது.
அல்லாஹ் உங்கள்
ஈமானை (நம்பிக்கையை)
வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக
அல்லாஹ் மனிதர்கள்
மீது மிகப்பெரும்
கருணை காட்டுபவன் நிகரற்ற அன்புடையவன்.
2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. |