|
அத்தியாயம்-24 ஸ_ரத்துந்
நூர் (பேரொளி) அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 24:1.
(இது திருக்குர்ஆனின்)
ஓர் அத்தியாயமாகும்;
இதனை நாமே அருளச்
செய்து, அதிலுள்ளவற்றை
விதியாக்கினோம்;
நீங்கள் நல்லுபதேசம்
பெறுவதற்காக
இதில் நாம் தெளிவான
வசனங்களை அருள்
செய்தோம். 24:2.
விபசாரியும்,
விபசாரனும் இவ்
விருவரில் ஒவ்வொருவரையும்
நூறு கசையடி அடியுங்கள்;
மெய்யாகவே, நீங்கள்
அல்லாஹ்வின்
மீதும், இறுதி
நாள் மீதும் ஈமான்
கொண்டவர்களாக
இருந்தால். அல்லாஹ்வின்
சட்டத்(தை நிறைவேற்றுவ)தில்,
அவ்விருவர் மீதும்
உங்களுக்கு இரக்கம்
ஏற்பட வேண்டாம்;
இன்னும் அவ்விருவரின்
வேதனையையும்
முஃமின்களில்
ஒரு கூட்டத்தார்
(நேரில்) பார்க்கட்டும். 24:3.
விபசாரன், விபசாரியையோ
அல்லது இணை வைத்து
வணங்குபவiளையோ
அன்றி வேறு எந்தப்
பெண்ணையும் விவாகம்
செய்ய மாட்டான்;
விபசாரி, விபசாரனையோ
அல்லது இணை வைத்து
வணங்குபவனையோ
அன்றி (வேறுயாரையும்)
விவாகம் செய்ய
மாட்டாள் இது
முஃமின்களுக்கு
விலக்கப்பட்டிருக்கிறது. 24:4.
எவர்கள் கற்புள்ள
பெண்கள் மீது
அவதூறு கூறி (அதை
நிரூபிக்க) நான்கு
சாட்சிகளைக்
கொண்டு வரவில்லையோ,
அவர்களை நீங்கள்
எண்பது கசையடி
அடியுங்கள்; பின்னர்
அவர்களது சாட்சியத்தை
எக்காலத்திலும்
ஏற்றுக் கொள்ளாதீர்கள்
நிச்சயமாக அவர்கள்தான்
தீயவர்கள். 24:5.
எனினும் (இவர்களில்)
எவர் இதற்குப்
பின்னர் தவ்பா
செய்து கொண்டு
(தங்களைத்) திருத்திக்
கொள்கிறார்களோ
நிச்சயமாக அல்லாஹ்
மன்னிப்பவனாகவும்,
கிருபை செய்பவனாகவும்
இருக்கின்றான். 24:6.
எவர்கள் தம் மனைவிமார்களை
அவதூறு கூறி (அதை
நிரூபிக்கத்)
தங்களையன்றி
அவர்களிடம் வேறு
சாட்சிகள் இல்லாமலிருந்தால்
அவன், நிச்சயமாக
தாம் உண்மையே கூறுவதாக
அல்லாஹ்வின்மீது
நான்கு முறை சத்தியம்
செய்து கூறி 24:7.
ஐந்தாவது முறை,
''(இதில்) தான் பொய்
சொல்வதாக இருந்தால்,
நிச்சயமாக அல்லாஹ்வுடைய
சாபம் தன்மீது
உண்டாகட்டும்""
என்றும் (அவன்
கூற வேண்டும்). 24:8.
இன்னும் (அவனுடைய
மனைவி குற்றத்தை
மறுத்து) தன் மீதுள்ள
தண்டனையை விலக்க,
''நிச்சயமாக அவன்
பொய்யர்களில்
நின்றுமுள்ளவன்""
என்று அல்லாஹ்வின்
மீது சத்தியம்
செய்து நான்கு
முறை கூறி 24:9.
ஐந்தாவது முறை,
''அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால்
நிச்சயமாக அல்லாஹ்வுடைய
கோபம் தன்மீது
உண்டாவதாக என்றும்
(அவள் கூற வேண்டும்). 24:10.
இன்னும் உங்கள்
மீது அல்லாஹ்வுடைய
நல்லருளும், அவனுடைய
ரஹ்மத்தும் இல்லாது
போயிருப்பின்,
(உங்களுக்கு அழிவு
உண்டாயிருக்கும்;)
நிச்சயமாக அல்லாஹ்
தவ்பாவை ஏற்றுக்
கொள்பவனாகவும்
ஞானமுடையோனாகவும்
இருக்கின்றான். 24:11.
எவர்கள் பழி சுமத்தினார்களோ,
நிச்சயமாக அவர்களும்
உங்களில் ஒரு
கூட்டத்தினரே!
ஆனால் அது உங்களுக்குத்
தீங்கு என்று
நீங்கள் எண்ண
வேண்டாம். அது
உங்களுக்கு நன்மையாகும்.
(பழி சுமத்தியவர்கள்)
ஒவ்வொரு மனிதனுக்கும்
அவன் சம்பாதித்த
பாவம் (அதற்கொப்ப
தண்டனை) இருக்கிறது
மேலும், அ(ப்பழி
சமத்திய)வர்களில்
பெரும் பங்கெடுத்துக்
கொண்டவனுக்குக்
கடினமான வேதனையுண்டு. 24:12.
முஃமினான ஆண்களும்,
முஃமினான பெண்களுமாகிய
நீங்கள் இதனைக்
கேள்வியுற்றபோது,
தங்களைப் (போன்ற
முஃமினானவர்களைப்)
பற்றி நல்லெண்ணங்
கொண்டு, ''இது பகிரங்கமான
வீண் பழியேயாகும்""
என்று கூறியிருக்க
வேண்டாமா? 24:13.
அ(ப்பழி சுமத்திய)வர்கள்
அதற்கு நான்கு
சாட்சிகளைக்
கொண்டு வர வேண்டாமா,
எனவே அவர்கள்
சாட்சிகளைக்
கொண்டு வரவில்லையெனில்,
அவர்கள் தாம்
அல்லாஹ்விடத்தில்
பொய்யர்களாக
இருக்கிறார்கள். 25:14.
இன்னும், உங்கள்
மீது இம்மையிலும்,
மறுமையிலும்
அல்லாஹ்வின்
அருளும், அவனுடைய
ரஹ்மத்தும் இல்லாதிருந்தால்,
நீங்கள் இச் சர்ச்சையில்
ஈடுபட்டிருந்தமைக்காக
கடினமான வேதனை
நிச்சயமாக உங்களைத்
தீண்டியிருக்கும். 25:15.
இப்பழியை (ஒருவரிடமிருந்து
ஒருவராக) உங்கள்
நாவுகளால் எடுத்து(ச்
சொல்லி)க் கொண்டு,
உங்களுகு;குத்
(திட்டமாக) அறிவில்லாத
ஒன்றைப் பற்றி
உங்கள் வாய்களால்
கூறித் திரிகின்றீர்கள்;
இன்னும் இதை நீங்கள்
இலேசானதாகவும்
எண்ணி விட்டீர்கள்.
ஆனால் அது அல்லாஹ்விடத்தில்
மிகப்பெரிய (பாவமான)தாக
இருக்கும். 24:16.
இன்னும் இதை நீங்கள்
செவியேற்ற போது,
''இதைப் பற்றி நாம்
பேசுவது நமக்கு(த்
தகுதி) இல்லை (நாயனே!)
நீயே தூயவன்; இது
பெரும் பழியாகும்""
என்று நீங்கள்
கூறியிருக்கலாகாதா? 24:17.
நீங்கள் (திடமாக)
முஃமின்களாகயிருப்பின்
நீங்கள் இது போன்ற
(பழி சுமத்துவ)தின்
பால் மீளலாகாது
என்று அல்லாஹ்
உங்களுக்கு போதிக்கிறான். 24:18.
இன்னும், அல்லாஹ்
(தன்) வசனங்களை
உங்களுக்கு (நன்கு
விவரித்துக்
கூறுகிறான்; மேலும்
அல்லாஹ் (யாவும்)
அறிந்தவன்; விவேகம்
மிக்கோன். 24:19.
எவர்கள் ஈமான்
கொண்டுள்ளோரிடையே
இத்தகைய மானக்கேடான
விஷயங்கள் பரவ
வேண்டுமெனப்
பிரியப்படுகிறார்களோ,
அவர்களுக்கு
நிச்சயமாக இம்மையிலும்
மறுமையிலும்
நோவினை செய்யும்
வேதனையுண்டு
அல்லாஹ் (யாவற்றையும்)
அறிகிறான். நீங்கள்
அறியமாட்டீர்கள். 24:20.
இன்னும், உங்கள்
மீது அல்லாஹ்வின்
அருளும், அவனுடைய
ரஹ்மத்தும் இல்லாதிருந்தால்
(உங்களை வேதனை
தீண்டியிருக்கும்.)
மேலும், நிச்சயமாக
அல்லாஹ் இரக்கமுடையவனாகவும்,
அன்புடையயோனாகவும்
இருக்கின்றான். 24:21.
ஈமான் கொண்டவர்களே!
ஷைத்தானுடைய
அடிச்சுவடுகளை
நீங்கள் பின்பற்றாதீர்கள்;
இன்னும் எவன்
ஷைத்தானுடைய
அடிச்சுவடுகளைப்
பின்பற்றுகிறானோ
அவனை, ஷைத்தான்
மானக் கேடானவற்றையும்,
வெறுக்கத்தக்கவற்றையும்,
(செய்ய) நிச்சயமாக
ஏவுவான்; அன்றியும்,
உங்கள் மீது அல்லாஹ்வின்
அருளும், அவனுடைய
ரஹ்மத்தும் இல்லாதிருந்தால்,
உங்களில் எவரும்
எக்காலத்திலும்
(தவ்பா செய்து)
தூய்மையயடைந்திருக்க
முடியாது - எனினும்
தான் நாடியவர்களை
அல்லாஹ் துய்மைப்
படுத்துகிறான்
- மேலும் அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும்,
நன்கறிவோனாகவும்
இருக்கின்றான். 24:22.
இன்னும், உங்களில்
(இறைவனின்) கொடை
அருளப் பெற்றவர்களும்,
தக்க வசதி உடையவர்களும்,
உறவினர்களுக்கும்
ஏழைகளுக்கும்,
(தம்மிடங்களை
விட்டு) அல்லாஹ்வின் பாதையில்
ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும்
(எதுவும்) கொடுக்க
முடியாது என்று
சத்தியம் செய்ய
வேண்டாம்; (அவர்கள்
தவறு செய்திருப்பின்)
அதை மன்னித்து
(அதைப்) பொருட்படுத்தாமல்
இருக்கவும்; அல்லாஹ்
உங்களை மன்னிக்க
வேண்டும் என்று
நீங்கள் விரும்ப
மாட்டீர்களா?
மேலும் அல்லாஹ்
(பிழை பொறுப்பவன்)
மிக மன்னிப்பவன்;
அன்பு மிக்கவன். 24:23.
எவர்கள் முஃமினான
ஒழுக்கமுள்ள,
பேதை பெண்கள்
மீது அவதூறு செய்கிறார்களோ,
அவர்கள் நிச்சயமாக
இம்மையிலும்,
மறுமையிலும்
சபிக்கப்பட்டவர்கள்;
இன்னும் அவர்களுக்குக்
கடுமையான வேதனையுமுண்டு. 24:24.
அந்நாளில் அவர்களுடைய
நாவுகளும், அவர்களுடைய
கைகளும், அவர்களுடைய
கால்களும் அவர்களுக்கெதிராக,
அவர்கள் செய்ததை
பற்றி சாட்சியம்
கூறும். 24:25.
அந்நாளில் அல்லாஹ்
அவர்களுக்குரிய
நியாயமான கூலியை,
அவர்களுக்குப்
பூரணமாகக் கொடுப்பான்;
இன்னும் அல்லாஹ்
தான் ''பிரத்தியட்சமான
உண்மை(யாளன்) என்பதை
அவர்கள் அறிந்து
கொள்வார்கள். 24:26.
கெட்ட பெண்கள்
கெட்ட ஆண்களுக்கும்
கெட்ட ஆண்கள்
கெட்ட பெண்களுக்கும்
இன்னும், நல்ல
தூய்மையுடைய
பெண்கள், நல்ல
தூய்மையான ஆண்களுக்கும்
நல்ல தூய்மையான
ஆண்கள் நல்ல தூய்மையான
பெண்களுகு;கும்
(தகுதியானவர்கள்.)
அவர்கள் கூறுவதை
விட்டும் இவர்களே
தூய்மையானவர்கள்.
இவர்களுக்கு
மன்னிப்பும்,
கண்ணியமான உணவுமுண்டு. 24:27.
ஈமான் கொண்டவர்களே!
உங்கள் வீடுகளல்லாத
(வேறு) வீடுகளில்,
அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று,
அவர்களுக்கு
ஸலாம் சொல்லாதவரை
(அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள்
- (அவ்வாறு நடப்பதுவே)
உங்களுக்கு நன்மையாகும்;
நீங்கள் நற்போதனை
பெறுவதற்கு (இது
உங்களுக்குக்
கூறப்படுகிறது). 24:28.
அதில் நீங்கள்
எவரையும் காணாவிட்டால்,
உங்களுக்கு அனுமதி
கொடுக்கப்படும்
வரையில் அதில்
பிரவேசிக்காதீர்கள்;
அன்றியும், 'திரும்பிப்
போய் விடுங்கள்"
என்று உங்களுக்குச்
சொல்லப்பட்டால்,
அவ்வாறே திரும்பி
விடுங்கள் - அதுவே
உங்களுக்கு மிகவும்
பரிசுத்தமானதாகும்;
மேலும், அல்லாஹ்
நீங்கள் செய்வதை
நன்கறிபவன். 24:29.
(எவரும்) வசிக்காத
வீடுகளில் உங்களுடைய
பொருட்கள் இருந்து,
அவற்றில் நீங்கள்
பிரவேசிப்பது
உங்கள் மீது குற்றமாகாது.
அல்லாஹ் நீங்கள்
பகிரங்கமாக செய்வதையும்,
நீங்கள் மறைத்து
வைப்பதையும்
நன்கறிவான். 24:30.
(நபியே!) முஃமின்களான
ஆடவர்களுக்கு
நீர் கூறுவீராக
அவர்கள் தங்கள்
பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ள
வேண்டும்; தங்கள்
வெட்கத் தலங்களைப்
பேணிக்காத்துக்
கொள்ள வேண்டும்;
அது அவர்களுக்கு
மிகப் பரிசுத்தமானதாகும்;
நிச்சயமாக அல்லாஹ்
அவர்கள் செய்பவற்றை
நன்கு தெரிந்தவன். 24:31.
இன்னும்; முஃமினான
பெண்களுக்கும்
நீர் கூறுவீராக
அவர்கள் தங்கள்
பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ள
வேண்டும்; தங்கள்
வெட்கத் தலங்களைப்
பேணிக்காத்துக்
கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங்காரத்தை
அதினின்று (சாதாரணமாக
வெளியில்) தெரியக்
கூடியதைத் தவிர
(வேறு எதையும்)
வெளிக் காட்டலாகாது
இன்னும் தங்கள்
முன்றானைகளால்
அவர்கள் தங்கள்
மார்புகளை மறைத்துக்
கொள்ள வேண்டும்;
மேலும், (முஃமினான
பெண்கள்) தம் கணவர்கள்,
அல்லது தம் தந்தையர்கள்,
அல்லது தம் கணவர்களின்
தந்தையர்கள்
அல்லது தம் புதல்வர்கள்
அல்லது தம் கணவர்களின்
புதல்வர்கள்,
அல்லது தம் சகோதரர்கள்
அல்லது தம் சகோதரர்களின்
புதல்வர்கள்,
அல்லது தம் சகோதரிகளின்
புதல்வர்கள்,
அல்லது தங்கள்
பெண்கள், அல்லது
தம் வலக்கரங்கள்
சொந்தமாக்கிக்
கொண்டவர்கள்,
அல்லது ஆடவர்களில்
தம்மை அண்டி வாழும்
(பெண்களை விரும்ப
முடியாத அளவு
வயதானவர்கள்)
பெண்களின் மறைவான
அங்கங்களைப்
பற்றி அறிந்து
கொள்ளாத சிறுவர்கள்
ஆகிய இவர்களைத்
தவிர, (வேறு ஆண்களுக்குத்)
தங்களுடைய அழகலங்காரத்தை
வெளிப்படுத்தக்
கூடாது மேலும்,
தாங்கள் மறைத்து
வைக்கும் அழகலங்காரத்திலிருந்து
வெளிப்படுமாறு
தங்கள் கால்களை
(பூமியில்) தட்டி
நடக்க வேண்டாம்;
மேலும், முஃமின்களே!
(இதில் உங்களிடம்
ஏதேனும் தவறு
நேரிட்டிருப்பின்,)
நீங்கள் தவ்பா
செய்து (பிழை பொறுக்கத்
தேடி), நீங்கள்
வெற்றி பெறும்
பொருட்டு, நீங்கள்
அனைவரும் அல்லாஹ்வின்
பக்கம் திரும்புங்கள். 24:32.
இன்னும், உங்களில்
வாழ்க்கைத் துணை
இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும்,
அவ்வாறே (வாழ்க்கைத்
துணையில்லா) ஸாலிஹான
உங்கள் (ஆண், பெண்)
அடிமைகளுக்கும்
விவாகம் செய்து
வையுங்கள்; அவர்கள்
ஏழைகளாக இருந்தால்,
அல்லாஹ் தன் நல்லருளைக்
கொண்டு அவர்களைச்
சீமான்களாக்கி
வைப்பான்; மேலும்
அல்லாஹ் (கொடையில்)
விசாலமானவன்.
(யாவற்றையும்)
நன்கறிந்தவன். 24:33.
விவாகம் செய்வதற்கு
(உரிய வசதிகளைப்)
பெற்றுக் கொள்ளாதவர்கள்
- அவர்களை அல்லாஹ்
தம் நல்லருளினால்
சீமான்களாக்கும்
வரை - அவர்கள் ஒழுக்கம்
பேணட்டும். இன்னும்
உங்கல் வலக்கரங்கள்
சொந்தமாக்கிக்
கொண்டவர்களில்
(அடிமைகளில் உரிய
தொகையைக் கொடுத்தோ
அல்லது முறையாக
சம்பாதித்துத்
தருவதாக வாக்குக்
கொடுத்தோ) எவரேனும்
(சுதந்திரமாவதற்கான)
உரிமைப் பத்திரம்
விரும்பினால்
- அதற்குரிய நன்மையான
தகுதியை நீங்கள்
அவ்வடிமையிடம்
(இருப்பது பற்றி)
அறிவீர்களாயின்,
அவர்களுக்கு
உரிமை பத்திரம்
எழுதிக் கொடுங்கள்.
இன்னும் அதற்கான
பொருளை அல்லாஹ்
உங்களுக்கு தந்திருக்கும்
பொருளிலிருந்து
அவர்களுக்குக்
கொடுப்பீர்களாக
மேலும், தங்கள்
கற்பைப் பேணிக்
கொள்ள விரும்பும்
உங்கள் அடிமைப்
பெண்களை - அற்பமான
உலக வாழ்க்கை
வசதிகளைத் தேடியவர்களாக
- விபசாரத்திற்கு
(அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்;
அப்படி எவனேனும்
அந்தப் பெண்களை
நிர்ப்பந்தித்தால்
அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட
பின் நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவனாகவும்
கிருபையுடையவனாகவும்
இருக்கிறான். 24:34.
இன்னும் நிச்சயமாக
உங்களுக்குத்
தெளிவாக்கும்
வசனங்களையும்,
உங்களுக்கு முன்
சென்று போனவர்களின்
உதாரணத்தையும்,
பயபக்தியுடையோருக்கு
நல்லுபதேசத்தையும்
நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். 24:35.
அல்லாஹ் வானங்கள்
பூமிக்கு ஒளி
(ஏற்படுத்துபவன்)
அவன் (ஏற்படுத்தும்)
ஒளிக்கு உவமை
விளக்கு வைக்கப்பட்டுள்ள
மாடம் போன்றதாகும்.
அவ்விளக்கு ஒரு
கண்ணாடி(க் குவி)யில்
இருக்கிறது அக்
கண்ணாடி ஒளிவீசம்
நட்சத்திரத்தைப்
போன்றதாகும்.
அது பாக்கியம்
பெற்ற ஜைத்தூன்
மரத்தி(ன் எண்ணெயி)னால்
எறிக்கப் படுகிறது.
அது கீழ்த்திசையை
சேர்ந்ததுமன்று
மேல்திசையை சேர்ந்ததுமன்று.
அதனை நெருப்புத்
தீண்டாவிடினும்,
அதன் எண்ணெய்
ஒளி வீச முற்படும்,
(இவை எல்லாம் சேர்ந்து)
ஒளிக்கு மேல்
ஒளியாகும். அல்லாஹ்
தான் நாடியவரை
தன்னுடைய ஒளி
(என்னும் சத்தியப்பாதை)யின்
பால் நடத்திச்
செல்கிறான். மனிதர்களுக்கு
இத்தகைய உவமைகளை
அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் யாவற்றையும்
நன்கு அறிபவன். 24:36.
இறை இல்லங்களில்
அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும்
(அவற்றின் கண்ணியம்)
உயர்த்தப்படவேண்டுமென்றும்
அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அவற்றில் காலையிலும்
மாலையிலும் (முஃமின்கள்)
அவனை துதி செய்து
கொண்டிருப்பார்கள். 24:37.
(அவ்வாறு துதி
செய்யும்) மனிதர்களை
அல்லாஹ்வை தியானிப்பதை
விட்டும், தொழுகையை
முறையாக நிறைவேற்றுவதை
விட்டும் ஜகாத்
கொடுப்பதை விட்டும்
அவர்களுடைய வாணிபமோ
கொடுக்கல் வாங்கல்களோ
பாராமுகமாக்கமாட்டா.
இதயங்களும், பார்வைகளும்
கலங்கித் தடுமாற்றமடையுமே
அந்த (இறுதி) நாளை
அவர்கள் அஞ்சுவார்கள். 24:38.
அவர்கள் செய்த
(நற்செயல்களுக்கு)
மிக அழகானதை அவர்களுக்கு
அல்லாஹ் கூலியாகக்
கொடுப்பதற்காகவும்,
அவனுடைய நல்லருளைக்
கொண்டு (அவன் கொடுப்பதை)
மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும்
(பயபக்தியுடன்
இருப்பார்கள்.)
மேலும் அல்லாஹ்
தான் நாடியவர்களுக்குக்
கணக்கின்றிக்
கொடுக்கிறான். 24:39.
அன்றியும், எவர்கள்
காஃபிராக இருக்கிறார்களோ,
அவர்களுடைய செயல்கள்
பாலைவனத்தில்
(தோற்றமளிக்கும்)
கானல் நீரைப்
போலாகும்; தாகித்தவன்
அதைத் தண்ணீரென்றே
எண்ணுகிறான்
- (எது வரையெனில்)
அதற்கு (அருகில்)
அவன் வரும் பொழுது
ஒரு பொருளையும்
(அங்கே) காணமாட்டானே
(அது வரை) ஆனால்,
அங்கு அவன் அல்லாஹ்
(அவனுக்கு விதித்திருக்கும்
முடி)வை(யே) காண்கின்றான்;
(அதன் படி அல்லாஹ்)
அவன் கணக்கைத்
தீர்க்கிறான்;
மேலும், அல்லாஹ்
கணக்குத் தீர்ப்பதில்
துரிதமானவன். 24:40.
அல்லது (அவர்களின்
நிலை) ஆழ்கடலில்
(ஏற்படும்) பல இருள்களைப்
போன்றதாகும்;
அதனை ஓர் அலை மூடுகிறது.
அதற்கு மேல் மற்றோர்
அலை அதற்கும்
மேல் மேகம். (இப்படி)
பல இருள்கள். சில
சிலவற்றுக்கு
மேல் இருக்கின்றன.
(அப்பொழுது) அவன்
தன் கையை வெளியே
நீட்டீனால் அவனால்
அதைப் பார்க்க
முடியாது எவனுக்கு
அல்லாஹ் ஒளியை
ஏற்படுத்தவில்லையோ
அவனுக்கு எந்த
ஒளியுமில்லை. 24:41.
(நபியே!) நீர் பார்க்கவில்லையா?
வானங்களிலும்
பூமியிலும் உள்ளவையும்,
பறவைகள் (விண்ணில்
தங்கள்) இறக்கைகளை
விரித்(துப் பறந்)த
வண்ணமாக நிச்சயமாக
அல்லாஹ்வைத்
தஸ்பீஹ{ செய்(து
துதிக்)கின்றன
ஒவ்வொன்றும்
தன் தொழுகையையும்,
(அல்லாஹ்வை) தஸ்பீஹ{
செய்யும் வழியையும்
திட்டமாக அறிந்தே
இருக்கிறது - அல்லாஹ்வும்
அவை செய்பவற்றை
நன்கறிந்திருக்கிறான். 24:42.
இன்னும் வானங்களுடையவும்
பூமியினுடையவும்
ஆட்சி அல்லாஹ்விடமே
இருக்கிறது அல்லாஹ்வின்
பக்கமே (யாவரும்)
மீண்டு செல்ல
வேண்டியிருக்கிறது. 24:43.
(நபியே!) நீர் பார்க்கவில்லையா?
நிச்சயமாக அல்லாஹ்
மேகத்தை மெதுவாக
இழுத்து, பின்னர்
அவற்றை ஒன்றாக
இணையச்செய்து,
அதன் பின் அதை
(ஒன்றின் மீது
ஒன்று சேர்த்து)
அடர்த்தியாக்குகிறான்;
அப்பால் அதன்
நடுவேயிருந்து
மழை வெளியாவதைப்
பார்க்கிறீர்;
இன்னும் அவன்
வானத்தில் மலைக(ளைப்
போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து
பனிக்கட்டியையும்
இறக்கி வைக்கின்றான்;
அதைத் தான் நாடியவர்கள்
மீது விழும்படிச்
செய்கிறான் - தான்
நாடியவர்களை
விட்டும் அதை
விலக்கியும்
விடுகிறான் - அதன்
மின்னொளி பார்வைகளைப்
பறிக்க நெருங்குகிறது. 24:44.
இரவையும் பகலையும்
அல்லாஹ்வே மாறி
மாறி வரச் செய்கிறான்;
நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு
இதில் (தக்க) படிப்பினை
இருக்கிறது. 24:45.
மேலும், எல்லா
உயிர்ப் பிராணிகளையும்
அல்லாஹ் நீரிலிருந்து
படைத்துள்ளான்;
அவற்றில் தன்
வயிற்றின் மீது
நடப்பவையும்
உண்டு அவற்றில்
இரு கால்களால்
நடப்பவையும்
உண்டு அவற்றில்
நான்கு (கால்)களை
கொண்டு நடப்பவையும்
உண்டு தான் நாடியதை
அல்லாஹ் படைக்கிறான்;
நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்றின்
மீதும் பேராற்றலுடையவனாக
இருக்கின்றான். 24:46.
நிச்சயமாக நாம்
தெளிவுபடுத்தும்
வசனங்களையே இறக்கியிருக்கிறோம்;
மேலும் தான் நாடியோரை
அல்லாஹ் நேர்வழிப்
படுத்துகிறான். 24:47.
''அல்லாஹ்வின்
மீதும், (இத்)தூதர்
மீதும் நாங்கள்
ஈமான் கொண்டோம்;
(அவர்களுக்குக்)
கீழ்படிகிறோம்""
என்று சொல்லுகிறார்கள்.
(ஆனால் அதன்) பின்னர்
அவர்களிலிருந்து
ஒரு பிரிவார்
புறக்கணித்து
விடுகின்றனர்
- எனவே, இவர்கள்
(உண்மையில்) முஃமின்கள்
அல்லர். 24:48.
மேலும் தம்மிடையே
(விவகாரம் ஏற்பட்டு,
அதுபற்றிய) தீர்ப்புப்
பெற அல்லாஹ்விடமும்,
அவன் தூதரிடமும்
(வரும்படி) அழைக்கப்பட்டால்,
அவர்களில் ஒரு
பிரிவார் (அவ்வழைப்பைப்)
புறக்கணிக்கிறார்கள். 24:49.
ஆனால், அவர்களின்
பக்கம் - உண்மை
(நியாயம்) இருக்குமானால்,
வழி பட்டவர்களாக
அவரிடம் வருகிறார்கள். 24:50.
அவர்களுடைய இருதயங்களில்
நோய் இருக்கிறதா?
அல்லது (அவரைப்
பற்றி) அவர்கள்
சந்தேகப்படுகிறார்களா?
அல்லது அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும்
தங்களுக்கு அநியாயம்
செய்வார்கள்
என்று அஞ்சுகிறார்களா?
அல்ல! அவர்களே
அநியாயக் காரர்கள். 24:51.
முஃமின்களிடம்
அவர்களுக்கிடையே
(ஏற்படும் விவகாரங்களில்)
தீர்ப்புக் கூறுவதற்காக
அல்லாஹ்விடமும்
அவனுடைய தூதரிடமும்
(வரும்படி) அழைக்கப்பட்டால்,
அவர்கள் சொல்(வது)
எல்லாம் ''நாங்கள்
செவியேற்றோம்,
(அதற்குக்) கீழ்படிந்தோம்""
என்பது தான்; இ(த்தகைய)வர்கள்
தாம் வெற்றியடைந்தவர்கள். 24:52.
இன்னும் எவர்கள்
அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும்
கீழ்படிந்து
அல்லாஹ்வுக்கு
பயபக்தி கொள்கிறார்களோ
அவர்கள் தாம்
வெற்றி பெற்றவர்கள். 24:53.
இன்னும் (நபியே!
நயவஞ்சகர்களுக்கு)
நீர் கட்டளையிட்டால்,
நிச்சயமாகப்
(போருக்குப்) புறப்படுவதாக
அல்லாஹ்வின்
மீது உறுதியாகச்
சத்தியம் செய்து
கூறுகிறார்கள்;
(அவர்களை நோக்கி)
''நீங்கள் சத்தியம்
செய்யாதீர்கள்.
(உங்கள்) கீழ்படிதல்
தெரிந்து தான்
நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றை
நன்கறிபவன்""
என்று கூறுவீராக. 24:54.
''அல்லாஹ்வுக்கு
நீங்கள் கீழ்படியுங்கள்;
இன்னும் (அவனுடைய)
ரஸ_லுக்கும் கீழ்பபடியுங்கள்""
என்று (நபியே!) நீர்
கூறுவீராக ஆனால்
நீங்கள் புறக்கணித்தால்
அவர் மீதுள்ள
கடமையெல்லாம்
தம் மீது சுமத்தப்பட்ட
(தூதுச் செய்தியை
உங்களிடம் அறிப்ப)துதான்;.
இன்னும் உங்கள்
மீது உள்ள (கடமையான)து
தான். எனவே, நீங்கள்
அவருக்குக் கீழ்படிந்து
நடந்தால் நீங்கள்
நேர்வழி பெறுவீர்கள்;
இன்னும் (நம் தூதைத்)
தெளிவாக எடுத்துரைப்பதைத்
தவிர (வேறெதுவும்
நம்) தூதர்மீது
கடமையில்லை. 24:55.
உங்களில் எவர்
ஈமான் கொண்டு
(ஸாலிஹான) - நற்செயல்கள்
புரிகிறார்களோ
அவர்களை, அவர்களுக்கு
முன்னிருந்தோரை(ப்
பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது
போல் பூமிக்கு
நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி
வைப்பதாகவும்,
இன்னும் அவன்
அவர்களுக்காக
பொருந்திக் கொண்ட
மார்க்கத்தில்
அவர்களை நிச்சயமாக
நிலைப்படுத்துவதாகவும்,
அவர்களுடைய அச்சத்தைத்
திட்டமாக அமைதியைக்
கொண்டு மாற்றி
விடுவதாகவும்,
அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;
''அவர்கள் என்னோடு
(எதையும், எவரையும்)
இணைவைக்காது,
அவர்கள் என்னையே
வணங்குவார்கள்;""
இதன் பின்னர்
(உங்களில்) எவர்
மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ
அவர்கள் பாவிகள்தாம். 24:56.
(முஃமின்களே!) நீங்கள்
கிருபை செய்யப்படும்
பொருட்டு, நீங்கள்
தொழுகையை நிலைநிறுத்துங்கள்;
இன்னும் ஜகாத்தைக்
கொடுங்கள்; மேலும்,
(அல்லாஹ்வின்)
தூதருக்குக்
கீழ்படியுங்கள். 24:57.
நிராகரிப்பவர்கள்
பூமியில் (உங்களை)
முறியடித்து
விடுவார்கள்
என்று (நபியே!) நிச்சயமாக
நீர் எண்ணவேண்டாம்.
இன்னும் அவர்கள்
ஒதுங்குமிடம்
(நரக) நெருப்புத்தான்;
திடமாக அது மிகக்
கெட்ட சேரும்
இடமாகும். 24:58.
ஈமான் கொண்டவர்களே!
உங்கள் வலக்கரங்கள்
சொந்தமாக்கிக்
கொண்டவர் (அடிமை)களும்,
உங்களிலுள்ள
பருவம் அடையாச்
சிறுவர்களும்
(உங்கள் முன் வர
நினைத்தால்) மூன்று
நேரங்களில் உங்களிடம்
அனுமதி கோர வேண்டும்;
ஃபஜ்ரு தொழுகைக்கு
முன்னரும், நீங்கள்
(மேல் மிச்சமான
உங்கள் உடைகளைக்
களைந்திருக்கும்
'ளுஹர்" நேரத்திலும்,
இஷாத் தொழுகைக்குப்
பின்னரும்-ஆக
இம்மூன்று நேரங்களும்
உங்களுக்காக
(அமையப் பெற்றுள்ள)
மூன்று அந்தரங்க
வேளைகளாகும்
- இவற்றைத் தவிர
(மற்ற நேரங்களில்
மேல்கூறிய அடிமைகளும்,
குழந்தைகளும்
அனுமதியின்றியே
உங்கள் முன் வருவது)
உங்கள் மீதும்
அவர்கள் மீதும்
குற்றமில்லை
இவர்கள் அடிக்கடி
உங்களிடமும்
உங்களில் ஒருவர்
மற்றவரிடம் வரவேண்டியவர்கள்
என்பதினால்; இவ்வாறு,
அல்லாஹ் தன் வசனங்களை
உங்களுக்கு விவரிக்கின்றான்;
மேலும் அல்லாஹ்
(யாவற்றையும்)
நன்கறிந்தவன்;
ஞானம் மிக்கவன். 24:59.
இன்னும் உங்களிலுள்ள
குழந்தைகள் பிராயம்
அடைந்துவிட்டால்
அவர்களும், தங்களுக்கு
(வயதில்) மூத்தவர்கள்
அனுமதி கேட்பது
போல் அனுமதி கேட்க
வேண்டும்; இவ்வாறே
அல்லாஹ் தன்னுடைய
வசனங்களை உங்களுக்கு
விவரிக்கின்றான்;
அல்லாஹ் (யாவற்றையும்)
அறிந்தவன்; ஞானம்மிக்கவன். 24:60.
மேலும், பெண்களில்
விவாகத்தை நாட
முடியாத (முதிர்ந்து)
வயதை அடைந்து
விட்ட பெண்கள்,
தங்கள் அழகலங்காரத்தை(ப்
பிறருக்கு) வெளியாக்காதவர்களான
நிலையில், தங்கள்
மேலாடைகளைக்
கழற்றியிருப்பது,
அவர்கள் மீது
குற்றமில்லை
ஆனால் (இதனையும்
அவர்கள் தவிர்த்து)
ஒழுங்கைப் பேணிக்கொள்வது
அவர்களுக்கு
மிகவும் நலமாக
இருக்கும். அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியேற்பவன்;
நன்கறிபவன். 24:61.
(முஃமின்களே! உங்களுடன்
சேர்ந்து உணவருந்துவதில்)
குருடர் மீதும்
குற்றமில்லை
முடவர் மீதும்
குற்றமில்லை,
நோயாளியின் மீதும்
குற்றமில்லை
உங்கள் மீதும்
குற்றமில்லை
நீங்கள் உங்கள்
சொந்த வீடுகளிலோ
அல்லது உங்கள்
தந்தைமார் வீடுகளிலோ,
அல்லது உங்கள்
தாய்மார் வீடுகளிலோ,
அல்லது உங்கள்
சகோதரர் வீடுகளிலோ,
அல்லது உங்கள்
சகோதரிகள் வீடுகளிலோ,
அல்லது உங்கள்
தந்தையின் சகோதரர்
வீடுகளிலோ, அல்லது உங்கள்
தந்தையின் சகோதரிகள்
வீடுகளிலோ, அல்லது
உங்கள் தாயின்
சகோதரர்கள் வீடுகளிலோ,
அல்லது உங்கள்
தாயாரின் சகோதரிகள்
வீடுகளிலோ, அல்லது
எ(ந்த வீட்டுடைய)தின்
சாவிகள் உங்கள்
வசம் இருக்கின்றதோ
(அதிலும்) அல்லது
உங்கள் தோழரின்
வீடுகளிலோ, நீங்கள்
சேர்ந்தோ அல்லது
தனித்தனியாகவோ
புசிப்பது உங்கள்
மீது குற்றமாகாது
ஆனால் நீங்கள்
எந்த வீட்டில்
பிரவேசித்தாலும்
அல்லாஹ்விடமிருந்து
உங்களுக்குக்
கிடைத்திருக்கும்
முபாரக்கான - பாக்கியம்
மிக்க - பரிசுத்தமான
(''அஸ்ஸலாமு அலைக்கும்""
என்னும்) நல்வாக்கியத்தை
நீங்கள் உங்களுக்குள்
கூறிக்கொள்ளுங்கள்
- நீங்கள்
அறிந்து கொள்வதற்காக,
இவ்வாறு அல்லாஹ்
உங்களுக்கு(த்
தன்) வசனங்களை
விவரிக்கிறான். 24:62.
அல்லாஹ்வின்
மீதும், அவனுடைய
தூதர் மீதும்
ஈமான் கொண்டவர்களே!
(உண்மை) முஃமின்களாவார்கள்,
மேலும், அவர்கள்
ஒரு பொதுவான காரியம்
பற்றி அவருடன்
(ஆலோசிக்கக் கூடி)
இருக்கும் போது
அவருடைய அனுமதியின்றி
(அங்கிருந்து)
செல்லமாட்டார்கள்;
(நபியே!) உம்மிடத்தில்
(அவ்வாறு) அனுமதி
பெற்றுச் செல்பவர்களே
நிச்சயமாக அல்லாஹ்வின்
மீதும் அவன் தூதர்
மீதும் மெய்யாகவே
ஈமான் கொண்டவர்கள்,
ஆகவே தங்கள் காரியங்கள்
சிலவற்றுக்காக
அவர்கள் உம்மிடம்
அனுமதி கேட்டால்,
அவர்களில் நீர்
விரும்பியவருக்கு
அனுமதி கொடுப்பீராக
இன்னும் அவர்களுக்காக
அல்லாஹ்விடம்
நீர் மன்னிப்புக்
கோருவீராக நிச்சயமாக
அல்லாஹ் மிக்க
மன்னிப்பவன்;
கிருபையுடையவன். 24:63.
(முஃமின்களே!) உங்களில்
ஒருவர் மற்றொருவரை
அழைப்பதுபோல்
உங்களுக்கிடையில்
(அல்லாஹ்வுடைய)
தூதரின் அழைப்பை
ஆக்காதீர்கள்.
உங்களிலிருந்து
(அவருடைய சபையிலிருந்து)
எவர் மறைவாக நழுவி
விடுகிறார்களோ
அவர்களை திடமாக
அல்லாஹ் (நன்கு)
அறிவான் - ஆகவே
எவர் அவருடைய
கட்டளைக்கு மாறு
செய்கிறார்களோ
அவர்கள் தங்களை
சோதனை பிடித்துக்
கொள்வதையோ, அல்லது
தங்களை நோவினை
தரும் வேதனை பிடித்துக்
கொள்வதையோ அஞ்சிக்
கொள்ளட்டும். 24:64.
வானங்களிலும்,
பூமியிலும் உள்ள
யாவும் நிச்சயமாக
அல்லாஹ்வுக்கே
சொந்தம் என்பதை
அறிந்து கொள்வீர்களாக!
நீங்கள் எந்த
நிலையில் இருக்கின்றீர்களோ
அதை அவன் (நன்கு)
அறிவான்; மேலும்
அவனிடத்தில்
அவர்கள் மீட்டப்படும்
அந் நாளில் அவன்,
அவர்கள் (இம்மையில்)
என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்பதையும் அவர்களுக்கு
அறிவிப்பான்
- மேலும், அல்லாஹ்
எல்லாப் பொருள்கள்
பற்றியும் நன்கறிபவன். 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |