அத்தியாயம்-80

_ரத்து அபஸ (கடுகடுத்தார்)

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 

80:1. அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

 

80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

 

80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

 

80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

 

80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

 

80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

 

80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

 

80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

 

80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

 

80:10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

 

80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

 

80:12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

 

80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

 

80:14. உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

 

80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

 

80:16. (லவ்ஹ{ல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

 

80:17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

 

80:18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

 

80:19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

 

80:20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

 

80:21. பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்" ஆக்குகிறான்.

 

80:22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

 

80:23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

 

80:24. எனவே, மனிதன்  தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

 

80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

 

80:26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

 

80:27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

 

80:28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

 

80:29. ஒலிவ மரத்தையும், போPச்சையையும் -

 

80:30. அடர்ந்த தோட்டங்களையும்,

 

80:31. பழங்களையும், தீவனங்களையும்-

 

80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

 

80:33. ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

 

80:34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

 

80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

 

80:36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

 

80:37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

 

80:38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

 

80:39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

 

80:40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

 

80:41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

 

80:42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

 

 

.பெருள் அடக்கம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114